Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(4) எண்ணிக்கை

 
 
01. இந்நூல் எதைப்பற்றி எழுதப்பட்டுள்ளது?
     இஸ்ராயேலர்   சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு வாக்களிக்கப்பட்ட  
     நாட்டின்  கிழக்கு எல்லையை அடைந்தது வரை நாற்பது ஆண்டுகளாக  
     நிகழ்ந்தவற்றின்  தொகுப்பே இந்நூல்.

02. ஆண்டவர்  மோயீசனிடம் எப்பொழுது கணக்கெடுக்கும்படி கூறினார்  ?
     இஸ்ராயேலர்   எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு, 
      இரண்டாம்  மாதம், முதல்நாள்;. (1:1-2).

03. கணக்கெடுக்கும் போது இஸ்ராயேலர்கள் எங்கிருந்தனர்  ?
     சீனாய் பாலைநிலத்தில்.(1:1).

04. யார்   யாரையெல்லாம் கணக்கெடுக்கும்படி கூறினார்  ?
     இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குச் செல்லத்தக்க  
     அனைவரையும்.  (1:3).

05. மோயிசனுக்கும், ஆரோனுக்கும் துணையாக யார்   நியமிக்கப்பட்டார்கள்?
     ஒவ்வொரு குலத்தின் வீட்டுத்தலைவனும். (1:5).

06. மொத்தம் எண்ணப்பட்ட இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கை என்ன?
      603,550 (1:46).

07. எந்த குலத்தவரின் எண்ணிக்கை எடுக்கப்படவில்லை?
      லேவி (1:49).

08. ஏன் லேவி குலத்தை மட்டும் எண்ணவில்லை?
      ஆண்டவர் இக்குலத்தின் கணக்கெடுப்பு எடுக்கவேண்டாம் என்றார்   (1:49).

09. லேவி குலத்திற்கு என்ன பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது?
       உடன்படிக்கைக் கூடாரத்தின் பொறுப்பை (1:50).

10. லேவி குலத்தவர் எங்கே பாளையமிறங்கினர்  ?
      உடன்படிக்கை கூடாரத்தைச் சுற்றி (1:53).

11. முதலில் அணிவகுத்து செல்ல வேண்டிய குலம் எது?
      யுதாவின் கொடியுடைய பாளையத்தவர்   (2:9).

12. யுதா அணியினரின் எண்ணிக்கை என்ன?
      186,400 (2:9).

13. இறுதியாக அணிவகுத்து செல்லவேண்டிய குலம் எது?
       டோர்   குலம் (2:31).

14. டோர்   குலத்தின் மொத்த எண்ணிக்கை என்ன?
      157,600 (2:31).

15. ஆரோனின் இறந்த மகன்களுக்கு பதிலாக குருக்களாக யார்   
      நியமிக்கப்பட்டார்கள்?

      எலயாசர், இத்தாமர்   (3:4).

16. ஆரோனுக்கு பணிவிடை புரிய நியமிக்கப்பட்ட குலம் எது?
      லேவி குலம் (3:6).

17. குருத்துவ பணி செய்ய நியமனம் செய்யப்பட்டவர்கள் யாவர்  ?
     ஆரோனும், அவன் புதல்வரும் (3:10).

18. லேவியின் புதல்வர்கள் பெயர்   என்ன?
     கேர்  சோன், கோகாத்து, மெரார்ரி     (3:17).

19. லேவியர் குலத்தின் மொத்த எண்ணிக்கை என்ன?
       22,000 (3:39).

20. இஸ்ராயேல் மக்களின் தலைப்பேறுகள் மொத்தம் எத்தனை?
      22,273 (3:43).

21. லேவியர்  எத்தனை வருடம் கூடாரப் பணிகளைச் செய்யலாம்?
     இருபத்தைந்து வயதுக்கு மேலும் ஐம்பது வயதுக்குள்ளும் (8:24).

22. எக்காளம் முழங்க யார்   நியமிக்கப்பட்டது?
     ஆரோனின் புதல்வர்கள் (9:8).

23. தபேரா என்னும் இடத்தில் நடந்தது என்ன?
      மக்கள் தங்கள் கடினப் பாடுகளைப் பற்றி முறையிட்டதால் ஆண்டவர்  சினம் 
      கொண்டு பாளையத்தின் கடைக்கோடிப் பகுதிகள் சிலவற்றை ஆண்டவர்       
      எரித்து விட்டார்   (11:1).

24. 'தபேரா"என்பதன் பொருள் என்ன?
      எபிரேயத்தில் 'எரிந்து கொண்டிருப்பது" என்று பொருள் (11:3).

25. இஸ்ராயேல் மக்கள் மோயிசனைப் பற்றி தவறாக பேசியது ஏன்?
      பலர்  உணவிலே மிகவும் விருப்பம் கொண்டிருந்தனர். எகிப்தில் உண்ட மீன், 
      வெள்ளாரிக்காய் போன்றவற்றின் மேல் ஆர்வம் காட்டியதால் (11:5).

26. மன்னா எவ்வாறு தோற்றமளித்தது?
      கொத்துமல்லி விதைபோன்றும் முத்துப் போன்றும் இருந்தது (11:7).

27. ஆண்டவர்   இஸ்ராயேல் மக்களுக்கு இறைச்சியளித்தாரா?
     ஆம், அவர்களுக்கு காடைகளை அனுப்பினார்   (11:31).

28. மோயிசன் எப்படிப்பட்ட மனிதராக திகழ்ந்தார்  ?
      பூவுலகில் அனைத்து மாந்தாரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் 
      திகழ்ந்தார்  (12:3).

29. மிரியாமைக்கு ஏன் தொழுநோய் பிடித்தது?
      மிரியாமை மோயிசனுக்கு எதிராக பேசியதால் (12:1).

30. இஸ்ராயேல் மக்களின் ஒவ்வொரு குலத்தின் தலைவரையும் மோயிசன் 
       எங்கே  அனுப்பினார் ?

       கானான் நாட்டை உளவு  பார்க்க (13:17).

31. அவர்கள் எத்தனை நாட்களுக்கு பிறகு திரும்பி வந்தனர்  ?
       40 நாட்களுக்குப் பின் (13:25).

32. அவர்கள் கொண்டு வந்த செய்தி என்ன?
     அந்நாட்டில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது. அங்கு வாழும் மக்கள் வலிமை  
      மிக்கவர்கள் (13:27,28).

33. கானான் நாட்டை முதலில் சென்று பிடித்துக் கொள்ளவேண்டும் என
      ஆசைப்பட்டது யார்?

      காலேபு (13:30).

34. கானான் நாட்டிற்கு உளவு   பார்க்க சென்றவர்களில் இருவர்  மட்டும்  
      தண்டனை  பெறவில்லை. அவர்கள் யாவர்  ?

      யோசுவாவும்? காலேபும் (14:6).

35. ஓய்வு   நாளை மீறி விறகு பொறுக்கிய மனிதன் என்ன ஆனான்?
      கல்லால் எரிந்து கொலை செய்யப்பட்டான் (15:36)

36. மோயிசனுக்கு எதிராக எழும்பிய 250 தலைவர்களுக்கு நேர்ந்தது என்ன?
     ஆண்டவாரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு அவர்களை விழுங்கிவிட்டது (16:35)

37. இந்த 250 பேருக்கும் தலைவர்   யார்  ?
      கோராகு (16:6).

38. தாத்தான்? அபிராம் இவ்விருவருக்கும் நேர்ந்தது என்ன?
     நிலம் தன் வாயைத் திறந்து அவர்களை விழுங்கிவிட்டது (16:32).

39. கொள்ளை நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை என்ன?
      14,700 (16:49).

40. ஒவ்வொரு குலத்தின் கோலிலும் என்ன எழுதப்பட வேண்டும் என ஆண்டவர்   
      கட்டளையிட்டார்  ?

      ஒவ்வொருவாரின் பெயரையும் அக்கோலின் மேல் எழுதும்படி 
       கட்டளையிட்டார் (17:2).

41. அடுத்தநாள் யாருடைய கோல் துளிர்  விட்டிருந்தது?
      ஆரோனின் கோல் (17:8).

42. ஆரோனின் கோல் எங்கே வைக்கப்பட்டது?
       உடன்படிக்கைப் பேழைமுன் வைக்கப்பட்டது (17:10).

43. குருத்துவ பணியை ஆரோனையும் அவருடைய புதல்வரையும் தவிர வேறு  
      எவரேனும் செய்ய அனுமதிக்கப்பட்டதா?

      இல்லை (18:7).

44. இஸ்ராயேல் மக்களிடமிருந்து கிடைக்கும் பொருட்களில் லேவியருக்கு
      சொந்தமான பங்கு என்ன?

      பத்திலொரு பங்கு (18:25).

45. ஆரோனுக்குறிய பங்கு என்ன?
     ஆண்டவாரின் படையல் (18:28)

46. இஸ்ராயேல் மக்கள் முதல் மாதத்தில் எங்கு சென்றடைந்தார்கள்?
      சீன் பாலைநிலத்தை சென்றடைந்தனர்   (20:1).

47. சீன் பாலைநிலத்திற்கு வந்து இஸ்ரயேல் மக்கள் எங்கு தங்கினர்  ?
      காதேசு (20:1).

48. மிரியாம் எந்த இடத்தில் இறந்தார்?
      காதேசு (20:1).

49. காதேசில் தங்கியிருந்த இஸ்ராயேல் மக்களுக்கு மோயிசன் தண்ணீர்  
      வழங்கியது  எப்படி?

      பாறையிலிருந்து  தண்ணீர்  வரவழைத்து அவர்களுக்கு வழங்கினர்   (20:11).

50. ஆண்டவர்   மோயிசனிடமும், ஆரோனிடமும் காதேசில் என்ன கூறினார்  ?
      நான்  இஸ்ராயேல்  மக்களுக்கு  கொடுக்கவிருக்கும்  நாட்டுக்குள்  அவன் 
      நுழைய  மாட்டான். ஏனெனில், 'மொரிபாவின் தண்ணீர்" அருகில் நீங்கள் என்
      கட்டளையை மீறினீர்கள் (20:24).

51. காதேசின் தண்ணீர்   மொரிபா என அழைக்கப்படுவது ஏன்?
      இஸ்ராயேல் மக்கள் ஆண்டவாரிடம் வாதாடியதால் (20:13).

52. ஏதோம் மன்னன், தன்னுடைய எல்லையை கடக்க மோயிசனுக்கு அனுமதி 
      அளித்தாரா?

     இல்லை (20:18)

53. மோயிசன், ஆரோனையும் அவருடைய மகனையும் ஓர் என்ற மலைக்கு   
      கொண்டு  சென்று என்ன செய்தார் ?

      மோசே ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவர்  மகன் எலயாசருக்கு
      உடுத்தினார்   (20:28).

54. ஓர்   மலையில் ஆரோனுக்கு என்ன நேர்ந்தது?
      அங்கேயே இறந்தார்   (20:28).

55. இஸ்ராயேல்  வீட்டார்  ஆரோனுக்காக  எத்தனை  நாட்கள்  துக்கம் 
      கொண்டாடினர்  ?

      30 நாட்கள் (20:29).

56. இஸ்ராயேல் மக்களை தாக்கிய மன்னன் யார்  ?
      அராது மன்னன் (21:1).

57. இஸ்ராயேல் மக்கள் அராது மன்னனுக்கு எதிராக என்ன செய்தனர்  ?
     அராது மன்னனின் நகரத்தையும், நகர மக்களையும் அழித்தனர்   (21:3).

58. இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசியபோது  
       கடவுள்  அவர்களை எப்படி தண்டித்தார்?

      ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை அவர்களிடையே அனுப்பி சாகடித்தார் 
        (21:6).

59. மோசே மக்களுக்காக மன்றாடியபொழுது கடவுள் என்ன கட்டளையிட்டார்  ?

      வெண்கலப் பாம்பொன்றை செய்து ஒரு கம்பத்தில் பொருத்துமாறு கூறினார் .   
      கடிக்கப்பட்டவர்கள் இதைப் பார்த்தால் பிழைப்பார்கள் (21:8).

60. எமோரிய மன்னன் சீகோன் தன் எல்லை வழியே இஸ்ராயேல் கடந்து செல்ல 
     அனுமதித்தானா?

      இல்லை (21:23).

61. சீகோன்? இஸ்ராயேல் மக்களுக்கு எதிராக எங்கு போரிட்டார்  ?
      யாகாஸ் (21:23).

62. யாகாஸ் போரில் நடந்தது என்ன?
    இஸ்ராயேல் வாழ்முனையில் சீகோனை கொன்று அந்நாட்டை கைப்பற்றினார்
     (21:24).

63. எமோரியாரின் தலைநகர்  எது?
     எஸ்யான் (21:26).

64. பாசான் நகர மன்னன் யார் ?
     ஓகு (21:33).

65. இஸ்ராயேலை எதிர்த்து ஓகு எங்கு போரிட்டார்?
      எதிரேயி (21:33).

66. ஓகுவை தோற்கடித்த பிறகு இஸ்ராயேலர்  எங்கு சென்றனர்?
     மோவாபிய சமவெளிக்கு(22:1).

67. மோவாபின் மன்னன் யார்  ?
      பாலாக்கு (22:4).

68. பிலயாம் என்பவர்  யார்  ?
     மோவாபு இறைவாக்கினர்.

69. பாலாக்கு பிலயாமிடம் கேட்டது என்ன?

     இஸ்ராயேல் மக்களை சபிக்குமாறு கேட்டார்   (22:6).

70. ஆண்டவர்   பிலயாமிடம் கூறியது என்ன?
     எழுந்து பாலாக்கிடம் செல என்றார்   (22:21);

71. பிலயாமின் கழுதை வழியில் யாரைக் கண்டது?
     ஆண்டவாரின் தூதர்   (22:23).

72. பிலயாம் இஸ்ராயேலை சபித்தாரா?
     இல்லை அவர்களுக்கு ஆசி வழங்கினார்   (23:11).

73. பிலயாம் வரவிருக்கும் மெசியாவைப் பற்றி என்ன கூறினார் ?
      நான் அவரைக் காண்பேன்: ஆனால் இப்போதன்று. நான் அவரைப் பார்ப்பேன்:  
     ஆனால் அண்மையிலன்று: யாக்கோபிலிருந்து விண்மின் ஒன்று உதிக்கும்  
     இஸ்ராயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும் (24:17).

74. சித்திமில் இஸ்ராயேல் மக்கள் தங்கியிருந்த போது செய்த பாவம் என்ன?
      மோவாபின் புதல்வியரோடு முறைகேடாக நடந்தனர்   (25:1).

75. இப்படிப்பட்ட பாவத்தை செய்த பிறகு இஸ்ராயேல் மக்கள் செய்தது என்ன?
      அவர்கள் தெய்வங்களைப் பணிந்து வணங்கினர்   (25:2).

76. இதற்கு ஆண்டவர்  என்ன தண்டனை வழங்குமாறு கட்டளையிட்டார்  ?
      பாகால் பெகோரை அடிபணிந்த தம் ஆட்களை கொன்று விடுமாறு
     கட்டளையிட்டார்   (25:5).

77. அப்பொழுது சாகடிக்கப்பட்டவாரின் மொத்த எண்ணிக்கை என்ன?
      24,800 பேர்   (25:9).

78. எலயாசாரின் புதல்வன் பினகாசு ஆண்டவரின்  சினத்தை எவ்வாறு 
      அகற்றினான்?

      மிதியானியப் பெண்ணையும், சிம்ரியையும் கொன்று (25:8).

79. உரிமைச் சொத்தை பற்றி ஆண்டவர்  கட்டளையிட்டது என்ன?
      மகன் இல்லாமல் ஒருவன் இறந்துவிட்டால் அவனுடைய உரிமைச் சொத்து  
     அவன்  மகளுக்கு சேரவேண்டும் (27:8).

80. இஸ்ராயேல் மக்களுக்கென கொடுத்துள்ள நாட்டை மோயிசன் எம்மலையில் 
      இருந்து பார்த்தார்  ?

     அபாரிம் மலை (27:12).

81. இஸ்ராயேலுக்கு கொடுக்கப்பட்ட நாட்டில் நுழைய மோயிசனுக்கு அனுமதி 
       கொடுக்காதது ஏன்?

       ஏனெனில் சீன் பாலைநிலத்தில் மக்கள் முன்னிலையில் ஆண்டவருடைய   
       புனிதத்தை எடுத்துரைக்காததால் (27:14).

82. மோசேவுக்கு அடுத்தப்படியாக இஸ்ராயேல் மக்களை வழிநடத்த கடவுள்
       யாரை  நியமித்தார் ?

      யோசுவாவை (27:22).

83. மோயிசன் யோசுவாவை எவ்வாறு நியமித்தார் ?
      தம் கைகளை அவர்  மேல் வைத்து (27:23).

84. மிதியானுக்கு எதிராக போர்   புரிய எத்தனைப்பேர்   தேர்ந்தெடுக்கப்பட்டனர்  ?
      இஸ்ராயேல் குலங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் 1000 பேர்   (31:4).

85. இந்த படை வீரர்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டவர்  யார் ?
      எலயாசர்   மகன் பினகாசு (31:6).

86. கொல்லப்பட்ட மிதியானின் அரசர்கள் எத்தனை?
       ஐந்து (31:8)

87. இஸ்ராயேல் மக்கள் மிதியானின் பெண்களையும், குழந்தைகளையும் என்ன     
      செய்தனர்  ?

     அவர்களை சிறைபிடித்தனர்   (31:9).

88. இவர்களை சிறைபிடித்து என்ன செய்தனர்  ?
      ஆண் குழந்தைகளையும், திருமணமான பெண்களையும் கொலைசெய்தனர்.     
       திருமணமாகாத பெண்களை உயிருடன் வைத்துக்கொண்டனர்   (31:17-18).

89. எத்தனை இளம்பெண்களை உயிருடன் விட்டனர் ?
      32,000 (31:5).

90. 'கெனாத்" என்னும் நகர்   'நோபாகு" என மாற்றப்பட்டது ஏன்?
       நோபாகு அந்நகரை கைப்பற்றியதால், அந்நகரை தம் பெயராலேயே 
        நோபாகு  என்று அழைத்தார்   (32:42).

91. ஆரோன் எங்கு இறந்தார்  ? அப்பொழுது அவருடைய வயது என்ன?
      ஓர்   மலையில்,    வயது 124 (33:39).

92. கானான் நாட்டை எவ்வாறு பிரித்தெடுக்குமாறு கடவுள் கட்டளையிட்டார்  ?
     ஒன்பது குலங்களுக்கும், பாதிக் குலத்துக்கும் திருவுளச் சீட்டு  மூலம்     
     உடைமையாக்கிக் கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டது (34:13).

93. ஆறு நகர்களில் தங்க வேண்டாம் என ஆண்டவர்  அவர்களுக்கு கூறியது ஏன்?
      தற்செயலாய் ஓர்   ஆளைக் கொல்பவன் எவனும் அங்கே ஓடிச் சென்று 
      புகலிடம்  பெறுவதற்காக (35:15).

94. இந்த ஆறு நகர்களும் எங்கே காணப்பட்டன?
      யோர்தானுக்கு அப்பால் மூன்று நகர்களும், கானான் நாட்டுக்குள் மூன்று 
    நகர்களும் (35:14).

கவலை மோதி வாட்டும் எமைக் காப்பதுன் கடமை,
தபமும் தயையும் நிறையும் மரியே அபயம் எங்கள் தாயே!