1. அகஸ்வேர்
என்பவர் யார்? இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரை இருந்த 117 மாநிலங்களையும் ஆட்சி செய்த மன்ன்ர் (1:1). 2. அகஸ்வேரின் தலைநகர் எது? சூசா (1:2). 3. அப்பொழுது இருந்த அரசியின் பெயர் என்ன? வஸ்தி (1:9). 4. மன்னர் அகஸ்வேர் அரசி வஸ்தியின் மீது கடுஞ்சினமுற காரணம் என்ன? மன்னர் அரசியிடம் தம் முன் வரும்படி கட்டளையிட்டார். இக்கட்டளைக்கு அரசி இணங்க மறுத்துவிட்டார் (1:12). 5. அரச கட்டளைக்கு கீழ்ப்படியாத அரசியை அவர் எவ்வாறு தண்டித்தார்? அரசர் முன் இனி வரக்கூடாது என்றார் (1:19). 6. அரசர், அரசியை பிரிந்தவுடன் யாரை மணந்தார்? எஸ்தர் (1:16). 7. எஸ்தர் என்பவர் யார்? அபிகாயிலின் புதல்வி (2:15). 8. மொர்தக்காய் என்பவர் யார்? எஸ்தரின் சிற்றப்பன் (2:7). 9. மன்னர் அகஸ்வேரை கொலை செய்ய வகை தேடியவர்கள் யார்? பிகதான், தெரேசு (2:21). 10. அவர்களுடைய திட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? மொர்தக்காய் (2:22). 11. இவ்வாறு திட்டம் தீட்டிய இருவருக்கும் ஆனது என்ன? அவர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர் (2:23). 12. ஆமான் என்பவர் யார்? மன்னர் அவையில் உயர்பதவி புரிந்தவர் (3:2), 13. ஆமான் மொர்தக்காய் மீது சினம் கொண்டது ஏன்? மொர்தக்காய் அவர்முன் மண்டியிட்டு வணங்கவில்லை. (3:2). 14. மொர்தக்காயை அழிக்க ஆமான் தீட்டிய திட்டம் என்ன? அரசெங்கும் இருந்த யூதர்களை அழிக்க மன்னரிடமிருந்து அனுமதி பெற்றான் (3:11). 15. எஸ்தர் என்ன செய்தாள்? சாவுத் தண்டனைக்குறிய செயலை அவர் செய்தார். மன்னரின் அழைப்பின்றி அவரது அவைக்குள் நுழைந்தார். 16. மன்னர் எஸ்தருக்கு தண்டனை கொடுத்தாரா? இல்லை . 17. எஸ்தரின் வேண்டுகோள் என்ன? தன் மாளிகையில் ஏற்பாடு செய்துள்ள விருந்தில் பங்கெடுக்குமாறு அரசரையும் ஆமானையும் பார்த்து வேண்டுகோள் விடுத்தார் (5:4), 18. தன்னை மதிக்காத மொர்தக்காயை ஆமான் செய்தது என்ன? ஐம்பது முழ உயரத் தூக்கு மரம் செய்து அடுத்த நாள் மொர்தக்காயை தூக்கிலிடுமாறு கட்டளையிட்டார்(5:14). 19. மன்னரது ஆட்சி குறிப்பேட்டை ஆமான் வாசித்தபோது மன்னன் கூறியது என்ன? ஆடைகளையும் புரவிகளையும் விரைவாய்க் கொணர்ந்து மொர்தக்காய்க்கு அந்த ஆடைகளை உடுத்துவித்து, புரவியின் மீது அமர்த்தி, நகர் வீதிகளில் வலம் வருமாறு கூறினார் (6:10). 20. எஸ்தர் விருந்தளிக்கும் போது கேட்ட வேண்டுதல் என்ன ? தனக்கும் தன் மக்களுக்கும் எந்த தீங்கும் விளைக்காமல் இருக்க வேண்டினார் (8:6). 21. ஆமான் எவ்வாறு தண்டிக்கப்பட்டார்? யூதருக்கு எதிராய் கை நீட்டிய ஆமான் தூக்கி லிடப்பட்டான் (8:7). 22. பூரிம் பெருவிழா என்பது என்ன? இது யூதர்களின் திருவிழா, ஆமான் யூதர்க்கெல்லாம் எதிரியாய் இருந்து அவர்களை அழிக்கவும், அடியோடு ஒழிக்கவும் பூர்', என்ற சீட்டைப் போட்டான். எஸ்தர், மன்னரின் உதவியை நாட மன்னர் அவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. எனவே யூதர்கள் இந்நாட்களை, 'பூர்', என்ற சொல்லினின்று எழுந்த பூரம்', என்ற பெயரால் அழைக்களாயினர் (9:19-21). |