Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(28) ஓசேயா

வடநாடான இஸ்ரயேலில் ஆமோசுக்குச் சற்றுப் பின்னர் வாழ்ந்தவர் இவர். சமாரியா வீழ்ச்சியூற்ற கி.மு. 722-க்கு முன் இறைவாக்கு உரைத்தவர்; இஸ்ரயேலரின் சிலை வழிபாட்டைக் கடிந்து கொண்டவர்; அவர்களது கீழ்ப்படியாமையைக் கண்டித்தவர். இவர் கோமேர் என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவள் அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து, அவரை விட்டு விலகிச் சென்றாள். அத்தகையவளோடு அவர் கொண்டிருந்த மண உறவைப் பின்னணியாகக் கொண்டு ஓசேயா இறைமக்களின் உண்மையற்ற தன்மையை, கீழ்ப்படியாமையை, நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்பினார். கடவூளை விட்டு விலகிச் சென்ற அவர்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவார்; ஆயினும் இறைவனின் பேரன்பு இறுதி வரை நிலைத்திருக்கும்; அம்மக்களை அவர் பக்கம் ஈர்த்துக் கொள்ளும்; அதன் மூலம், முறிந்த உறவூ மலரும். இதுவே இவரது நூலின் செய்தியாகும்.
1) ஓசேயா என்பவர் யார்?
     வடநாடான இஸ்ராயேலில் ஆமோசுக்கு சற்று பின்னர் கி.மு 750ல் வாழ்ந்தவர்.

 2) ஓசேயா என்றும் பெயரின் பொருள் என்ன?
      ஒசேயா என்னும் என்னும் பெயருக்கு "கடவுளே மீட்பர்" என்பது பொருள்.

 3) இவ்விறைவாக்கினரின் சிறப்பு என்ன?
    இவர் ஆண்டவர் கட்டளையின்படி, விலைமகள் ஒருத்தியை சேர்த்துக் கொண்டு,
    வேசிப்பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். ஏனெனில் நாடு ஆண்டவரை விட்டு
    விலகி, வேசித்தனத்தில் மூழ்கியிருந்தது. (1:2)

4) ஓசேயாவின் மனைவி பெயர் என்ன?
     கோமேர் (1:3)

5) திருமணத்திற்குப் பிறகு, கோமேர் ஓசேயாவிற்கு பிரமாணிக்கமாய் இருந்தாரா?
    இல்லை.

6) ஓசேயாவை விட்டுச் சென்ற கோமேரை அவர் என்ன செய்தார்?
    அவர் கோமேரைத் தேடிக் கண்டு பிடித்து, மீண்டும் தன் இல்லத்திற்கு கொண்டு
    வந்தார்.

 7) திருமணத்தின் வழியாக, ஒசேயா இறைவாக்கினர் கற்றுத் தரும் பாடம் என்ன?
     சிலை வழிபாட்டுப் பாவத்திலிருந்து, இஸ்ராயேல் கடவுளிடம் திரும்பவேண்டும்
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்