1. கடவுளால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
"தாய்வயிற்றில் உன்னை நான் உருவாக்குமுன்பே
அறிந்திருந்தேன், நீ பிறக்கு
முன்பே உன்னைத்
திருநிலைப்படுத்தினேன், மக்களினங்களுக்கு
இறைவாக்கினனாக
உன்னை ஏற்படுத்தினேன்" (1:5)
2. எரேமியா குயவர் வீட்டில் இருக்கும்பொழுது கடவுள்
கூறியது என்ன?
"இந்தக் குயவர் கையிலுள்ள களிமண்ணைப்போல, இஸ்ராயேல்
வீட்டாரே,
நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்" (18:6)
3. எரேமியாவை சிறையில் அடைத்தது யார்?
பஸ்கூர் என்னும் குரு. (20:2)
4. எரேமியா கூறிய பதில் என்ன?
"யூதா முழுவதையும் பாபிலோனிய மன்னனிடம் கையளிப்பேன்: அவன்
அவர்களை பாபிலோனுக்கு நாடு கடத்தி வாளால் வெட்டி
வீழ்த்துவான்". (20:4)
5. எரேமியா இயேசுவின் வருகையைப்பற்றிக் கூறியது என்ன?
இதோ நாட்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு
நீதியுள்ள
"தளிர்"
தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி
செலுத்துவார். அவர் ஞானமுடன்
செயல்படுவார் (23:5)
6. எரேமியா சாகவேண்டுமென குருக்கள் கூச்சலிட்டது ஏன்?
அவர் எருசலேமின் அழைவைப்பற்றி இறைவாக்கு உரைத்ததால்.
(26:9)
7. உரியா என்பவர் யார்?
அவர் கிரியத்து எயாரிமைச் சார்ந்த செமாயாவின் மகன். இவரும்
எரேமியாவைப் போல் எருசலேம் நகரின் அழிவைப்பற்றி
முன்னறிவித்தவர்.
(26:20)
8. உரியாவிற்கு நடந்தது என்ன?
அவர் உயிருக்கு அஞ்சி எகிப்துக்கு ஓடினார். ஆனால் அவர்
மீண்டும் கொண்டு
வரப்பட்டு சாகடிக்கப்பட்டார். (26:21-23)
9. எரேமியா எவ்வாறு காப்பாற்றப்பட்டார்?
அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார். (26:24)
10. எரேமியா தன் தோளின்மேல் நுகத்தை வைத்துக்கொண்டு மக்கள்
முன்
தோன்றியது ஏன்?
அவர்கள் அனைவரும் பாபிலோனுக்கு அடிமையாவார்கள் என்பதை
மக்களுக்கு எடுத்துரைக்கவே. (27:6)
11. எரேமியா 31:33-34 ல் என்ன கூறுகிறார்?
அந்நாள்களுக்குப் பிறகு, இசுரயேல் வீட்டாரோடு நான்
செய்யவிருக்கும்
உடன்படிக்கை இதுவே:
என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்;
அதை அவர்களது இதயத்தில்
எழுதிவைப்பேன்.
நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்;அவர்கள்
என்மக்களாய் இருப்பார்கள்,
என்கிறார் ஆண்டவர்.
இனிமேல் எவரும் "ஆண்டவரை அறிந்துகொள்ளும்"
எனத் தமக்கு
அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர
மாட்டார்.
ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர்
வரை அனைவரும் என்னை
அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர்.
அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்;
அவர்களுடைய
பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன்."
11. செதேக்கியாவுக்கு ஏற்பட்டது என்ன?
பாபிலோனிய மன்னன் செதேக்கின் புதல்வர்களை அவன் கண்முன்னாலே
கொன்றான். மேலும் செதேக்கின் கண்களைப் பிடுங்கி அவரையும்
கொன்றான். (39:6-7)
12. ஆண்டவரின் இல்லம் அழிக்கப்பட்டது எப்படி?
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் மெய்க்காப்பாளர்
நெபுசரதான்
ஆண்டவரின் இல்லத்தை தீக்கிரையாக்கினான்.
(52:13)
13. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட
யூதர்கள் எத்தனைபேர்?
4600பேர். (52:30)
|
|