1. இறைவாக்கு உரைக்க கடவுள் எசாயாவை எப்போது
தேர்ந்தெடுத்தார்?
கி.மு. 740ல்
2. எசாயா அனுப்பப்பட்டதன் நோக்கம் என்ன?
இஸ்ராயேல் மற்றும்
யூதாவின் வீழ்ச்சியை முன்னறிவிக்க.
3. எசாயா மக்களிடம் கூறியது என்ன?
பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்: அவர்களோ எனக்கெதிராக
கிளர்ந்தெழுந்தார்கள். (1:2)
4. எசாயா மக்களைப் பார்த்து செய்யச் சொன்னது என்ன?
"தீமை செய்தலை விட்டொழியுங்கள்,
நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்,
நீதியை நாடித் தேடுங்கள்,
ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்,
திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்,
கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்". (1:16-17)
5. ஆண்டவர்முன் சேராபீன்கள் பாடிய பாடல் என்ன?
படைகளின் ஆண்டவர்
தூயவர், தூயவர்,
தூயவர், மண்ணுலகம்
முழுவதும்
அவரது மாட்சியால் நிறைந்துள்ளது. (6:3)
6. ஆகாசுக்கு ஆண்டவர் அளித்த அடையாளம் என்ன?
இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண், ஓர் ஆண்மகவைப்
பெற்றெடுப்பார்,
அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று
பெயரிடுவார்.(7:14)
7. மேற்கூறிய வார்தைகள் யாரைக் குறிக்கிறது?
மரியாவையும், அவர் மகன் இயேசுவையும்.
8. வரவிருக்கும் இயேசுவைப்பற்றி எசாயா முன்னறிவித்தது என்ன?
ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஒரு ஆண்மகவு நமக்கு
தரப்பட்டுள்ளார்,
ஆட்சிப் பொறுப்பு அவர் தோள் மேலிருக்கும்:
அவர் திருப்பெயரோ
"வியத்தகு
ஆலோசகர்" "வலிமை மிகு இறைவன்",
"என்றுமுள்ள தந்தை",
"அமைதியின்
அரசர்" என்று அழைக்கப்படும்.
(9:6)
9. திருமுழுக்கு யோவானைப்பற்றி எசாயாவின் இறைவாக்கு என்ன?
குரலொலி ஒன்று முழங்குகிறது: பாலை நிலத்தில் ஆண்டவருக்காக
வழியை
ஆயத்தமாக்குங்கள்: பாழ் நிலத்தில் நம் கடவுளுக்காக
நெடுஞ்சாலை ஒன்றை
சீராக்குங்கள், பள்ளத்தாக்குகள் எல்லாம்
நிரப்பப்படும், மலைக்குன்று யாவும்
தாழ்த்தப்படும்:
கோணலானது நேராக்கப்படும்: கரடுமுரடானது
சமதளமாக்கப்படும்,
ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்" (40:3-5)
10. எசாயா இறைவாக்கினர்
மெசியாவின் காலத்தைதைப்பற்றி
அறிவித்தது
என்ன?
"ஆண்டவராகிய என்தலைவரின் ஆவி, என்மேல் உள்ளது: ஏனெனில்
அவர்
எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்:
ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை
அறிவிக்கவும், உள்ளம்
உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு
விடுதலை
பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடியலைத் தெரிவிக்கவும்,
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் என்னை
அனுப்பியுள்ளார்"
.
(61:1-2)
11. ஆண்டவரின் கடைசித் தீர்ப்புப் பற்றி எசாயா அறிவிப்பது
என்ன?
"அவர்கள் செயல்களையும், எண்ணங்களையும் நான் அறிவேன்:
பிறஇனத்தார்,
பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச்
சேர்க்க வருவேன்;: அவர்களும்
கூடி வந்து என்மாட்சியைக்
காண்பார்கள்" (66:18)
|
|