Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(22)  இனிமை மிகு பாடல்

  • நூலின் பாடல்கள் கடவுளுக்கும் இஸ்ராயேல்  மக்களினத்திற்கும் இடையே நிலவும் அன்புறவை (காதலுறவை) வருணிக்கின்றன.
  • பாலசுத்தீன நாடு மக்கள் நடுவில் திருமணத்தின்போது பாடப்பட்ட கவிதைகளின் தொகுப்பே இந்நூல்.
  • ஆண்-பெண் இருவருக்கும் நடுவில் முகிழ்க்கும் இயல்பான காதலுணர்வை இருவரும் ஒருவர்க்கொருவர் வெளிப்படுத்தும் கவிதைகள் அல்லது கூற்றுக்கள் அடங்கியதே இந்நூல்.

1. இனிமைமிகுபாடல் என்னும் நூலை எழுதியவர் யார்?
     மாமன்னர் சாலமோன் (முன்னுரை)

2. இந்நூலின் முன்னடக்கம் என்ன?
    கடவுளுக்கும் இஸ்ராயேல் மக்களினத்திற்கும் இடையே நிலவும் அன்புறவை
    வர்ணிக்கின்றது. (முன்னுரை)

3. இக்கருத்தை நூலாசிரியர் எவ்வாறு எடுத்துரைக்கிறார்?
    ஆண் - பெண் இருவருக்கும் இடையே உண்டான அன்புணர்வின் மூலமாக
     எடுத்துரைக்கிறார். (முன்னுரை)

4. கடவுள் என்னும் பெயரை இந்நூலாசிரியர் இந்நூலில் பயன்படுத்தியுள்ளாரா?
    இல்லை. (முன்னுரை)

5. இந்நூலுக்கு திருச்சபை கூறும் பல்வேறு பொருள் என்ன?
     கடவுள் - இஸ்ராயேல் இடையே நிலவும் உறவு.
     கடவுள் - சவுல் இடையே நிலவும் உறவு.
     ஆண் - பெண் இடையே உறவும் நிலவு

6. முதல் பாடலில் திலை கூறுவது என்ன?
   "எருசலேம் மங்கையரே, கருப்பாயிருப்பினும், நான் எழில் மிக்கவளே!" (1:5)

7. ஐந்தாவது பாடலில், "மரியா ஆண்டவரின் தாய்" என்னும் கருத்தை எந்த  
   வசனம் விபரிக்கின்றது?
 "யார் இவள், வைகறைபோல் தோற்றம், திங்களைப்போல் அழகு, ஞாயிறுபோல் 
   ஒளி:போரணிபோல் வியப்பார்வம், யாரிவள்?" (6:10)
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்