1. பேதுறு இத்திருமுகத்தை எழுதிய நோக்கம் என்ன?
துன்புறுத்தப்பட்ட காலத்திலும், சோதனைக்காலத்திலும்,
கிறிஸ்தவர்களை
ஊக்கப்படுத்தவும் தளர்ந்து போன நம்பிக்கையை
மீண்டும் கட்டி எழுப்பவும்
இத்திருமுகத்தை
எழுதினார்.
2. இத்திருமுகம் யாருக்காக எழுதப்பட்டது?
சின்ன ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ சபைகளுக்கு எழுதப்பட்டது.(1:1)
3. சோதனைகளில் மற்றும் துயரங்களின் நோக்கம் என்ன?
நமது நம்பிக்கை மெய்யானது என்று நிரூபிக்கவே. (1:7)
4. மனிதரை விடுவிக்க கொடுக்கப்பட்ட விலை என்ன?
கிறிஸ்துவின்
உயர் மதிப்புள்ள இருத்தம்.(1:19)
5. ஆண்டவரின் வார்த்தை என்ன?
நற்செய்தி. (1:25)
6. கணவர் மனைவியருக்கு பேதுறு கூறும் அறிவுரை என்ன?
திருமணமான
பெண்களே! உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள்:
திருமணமான ஆண்களே உங்கள் மனைவியரோடு இணைந்து வாழுங்கள்
(3:1-7)
7. ஒரு பெண்ணின் அலங்காரப்
பெருள் என்ன?
பணிவும் அமைதியும். (3:4)
8. ஆயர்களுக்குப் பிறகு பேதுறு வழங்கும் அறிவுரை என்ன?
ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள்.
உங்களிடம
ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாதீர்கள். (5:2)
9. கிறிஸ்தவர் ஏன் விழிப்பாய் இருக்கவேண்டும்?
ஏனெனில் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமென கர்ச்சிக்கும்
சிங்கம் தேடித் திரிகிறது. (5:8)
10. பேதுறுவின் நம்பிக்கைக்குரிய சகோதரன்
யார்?
சில்வான். (5:12)
|
|