Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(20) யாக்கோபு எழுதிய திருமுகம்

  "தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்" (யாக் 1:27).  

1. யாக்கோபு என்பவர் யார்?
     மரபுக் கருத்துப்படி, யாக்கோபு ஆண்டவரின் சகோதரர்: அப்போஸ்தலர்களிள்
     ஒருவர்.

2. யாக்கோபு திருமுகத்தை எப்பொழுது எழுதினார்?
    கி.பி. 50

3. தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எது என யாக்கோபு கூறுகிறார்?
    துன்புறும் அனாதைகளையும், கைம்பெண்களையும் கவனித்தலும்,உலகத்தால் 
    கறைபடாதபடி தம்மை காத்துக்கொள்வதும் ஆகும்.(1:27)

4. அடுத்திருப்பவர்மேல் அன்பு கூர்வதைப்பற்றிய சட்டம் என்ன?
    உன்மீது நீ அன்பு கூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு 
      கூர்வாயாக (2:8)

5. ஒருவர் சட்டம் ஒன்றில் மட்டும் தவறினால் அவர் குற்றமானவரா?
    ஆம் , அவர் அனைத்தையும் மீறிய குற்றத்திற்குள்ளாவார். (2:10)

6. செயலில்லாத நம்பிக்கையினால் என்ன பலன்?
    ஒரு பலனும் இல்லை. உயிர் இல்லாத உடல்போல, செயல்களில்லாத
    நம்பிக்கையும் கெட்டதே. (2:26)

7. செயல்களில்லாத நம்பிக்கை கெட்டது என்பதை நிரூபிக்க யாக்கோபு தரும்    
    உதாரணம் என்ன?

    ராக்காபு என்ற விலை மகள் தூதர்களை வரவேற்று வேறுவழியாக அனுப்பிய
    போது செயல்களால் அல்லவா கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனார். (2:25)

8. பலர் போதகர்களாக மாறவேண்டாம் என யாக்கோபு கூறக் காரணம் என்ன?
    ஏனெனில் போதகர்கள் மிகக் கண்டிப்பாக தீர்ப்புக்கு ஆளாவார்கள். (3:1)

9. தந்தையாகிய ஆண்டவரைப் போற்றுவதும் தூற்றுவதும் எது?
    நாவு. (3:9

10. விண்ணில் இருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு என்ன?
      தூய்மை. (3:17)

11. யாக்கோபு நோயுற்றோர்களைப் பற்றிக் கூறுவது என்ன?
     உங்களுள் யாரேனும் நோயுற்று இருந்தால் திருச்சபையின் மூப்பர்களை     
       அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர் மீது     
        எண்ணெய்  பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். (5:14)

 
 

அம்மா மரியே அன்பும் அருளும் நீயே!  வாழியவே வாழியவே!!
வானோர் போற்றும் தாயே!!!