1. " திருப்பாடல்கள்" என்னும்
நூலில் உள்ள மொத்தத்
திருப்பாடல்கள் எத்தனை?
150.
2. " திருப்பாடல்கள்" என்றால் என்ன?
இஸ்ராயேல் மக்கள் தங்கள் வழிபாட்டில் பயன்படுத்திய
பக்திப் பாடல்கள், இசை
மன்றாட்டுக்கள் ஆகியவற்றன் தொகுப்பு.
3. திருப்பாடல்களை எழுதியவர் யார்?
தாவீது அரசர் எழுதியதாகக் கருதப்படுகிறது.
4. மெசியாவைப்பற்றி இரண்டாவது
திருப்பாடலில் வாசிப்பது என்ன?
" நீர் என் மைந்தர், இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்"
(2:7)
5. பாவமன்னிப்பைப் பற்றி திருப்பாடல் எண் 32 கூறுவது என்ன?
" எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம்
மறைக்கப்பட்டதோ, அவர் பேறு
பெற்றவர்" (31;1)
6. எளியோர் மேல் அக்கறை காட்டுவோரை ஆண்டவர் எவ்வாறு கைமாறு
அளிக்கிறார் என
திருப்பாடல் எண் 41 கூறுகிறது?
துன்பநாளில் அவரை விடுவிப்பார். (41:1)
7. தாவீது தன்னுடைய குற்றத்தை உணர்ந்து பாடுவதை
திருப்பாடல் எண் 51 எவ்வாறு
சித்தரிக்கிறது?
" கடவுளே, உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும், உமது
அளவற்ற இரக்கத்திற்கேற்ப என்
குற்றங்களை துடைத்தருளும்.
ஏன் தீவினை முற்றிலும் நீங்கும்படி, என்னைக் கழுவியருளும்.
என் பாவம் அற்றுப்போகும்படி, என்னைத்
துர்ய்மைப்படுத்தியருளும்" (51:1-2)
8. தாவீது கடவுள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை திருப்பாடல்
எண் 62 எப்படிக் காட்டுகிறது?
" எனக்கு மீட்புக் கிடைப்பது அவரிடமிருந்தே, உண்மையாகவே என்
கற்பாறையும் மீட்பும்
அவரே, என் கோட்டையும் அவரே, எனவே
நான் சிறிதும் அசைவுறேன்" (62:1-2)
9. திருப்பாடல் 103ல் தாவீது ஆண்டவரின் அன்பை எவ்வாறு
பாடுகிறார்?
" என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என்முழு உளமே! அவரது
திருப்பெயரை ஏற்றிடு! என்
உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!அவருடைய
கனிவான செயல்கள் அனைத்தையும்
மறவாதே!" (103:1-2)
10. திருப்பாடல் 110, மெசியா எவ்வாறு குரு என்றும், அரசர்
கூறுகிறது?
" மெலகிசேதேக்கின் முறைப்படி, நீர் என்றென்றும் குருவே"
(110:1)
11. திருப்பாடல் 133, சகோதர அன்பைப் பற்றி எவ்வாறு
விபரிக்கிறது?
" சகோதரா; ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று,எத்துணை இனியது!"
(133:1)
12. மிகப்பெரிய திருப்பாடல் எண் எது?
திருப்பாடல் 119. இதில் 176 வசனங்கள் உள்ளன.
13. மிகக் குறுகிய திருப்பாடல் எது?
திருப்பாடல் 117. இதில் 2 வசனங்கள் உள்ளன.
14. திருப்பாடல் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
5 பிரிவுகளாக. |
|