1. தாவீதின் வயது முதிர்ந்த காலத்தில்
அவருக்கு அடுத்ததாக அரசராகத்
திட்டமிட்டவன் யார்?
அதோனியா (1:5)
2. அதோனியாவுக்கு
துணை நின்றவர் யார்?
யோவாபு(1:7)
3. அதோனியாவுக்கு எதிராய் இருந்தவர்கள் யார்?
குருவாகிய சதோக்கும், இறைவாக்கினர் நாத்தானும். (1:8)
4. அதோனியா விருந்து வைத்தபொழுது சலமோனை
அழைத்தாரா?
இல்லை. (1:10)
5. சலமோனின் அன்னை பத்சேபாவிடம் நாத்தான்
கூறியது என்ன?
தாவீதிடம் சென்று சலமோனுக்கு அரசபதவி அளிக்குமாறு கேட்கச்சொன்னார்.
(1:13)
6. தன் மனைவி பத்சேபாவின் வேண்டுதலுக்கு தாவீது
என்ன பதிலளித்தார்?
சலமோனை கீகோனுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கே குரு சதோக்கும்,
இறைவாக்கினர் நாதானும், அவனை இஸ்ராயேலின் அரசனாக திருப்பொழிவு
செய்யட்டும். (1:34)
7. சலமோன் அரசராக திருப்பொழிவு செய்யப்பட்டாரா?
ஆம். (1:39)
8. சாலமோன் தன்னுடைய சகோதரர் அதோனியாவை உயிருடன் விட்டு
வைத்தாரா?
ஆம், அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பினார். (1:53)
9. தாவீது எங்கே அடக்கம் செய்யப்பட்டார்?
தாவீது நகரில். (2:10)
10. தாவீது எத்தனை வருடம் ஆட்சி புரிந்தார்?
40 ஆண்டுகள். (2:11)
11. சாலமோன் அதோனியாவைக் கொலை செய்யுமாறு கட்டளையிட்டது ஏன்?
கனேமைச் சார்ந்த அபிசாகை அவருக்கு மணமுடித்து
வைக்கும்படிகேட்டதால்.
(2:17)
12. அதோனியாவுக்கு துணை நின்ற குரு அபியத்தாரை
சாலமோன் எவ்வாறு
தண்டித்தார்?
அபியத்தார் ஆண்டவரின் குருவாய் இராதபடி சாலமோன்
அவரை விலக்கி
விட்டார். (2:27)
13. யோவாபு எவ்வாறு தண்டிக்கப்பட்டார்?
அவரைக் கொலை செய்தனர். (2:31)
14. படைத்தலைவனாக நியமிக்கப்பட்டது யார்?
பேனாயா. (9:35)
15. சிமயி கொலை செய்யப்பட்டது ஏன்?
சிமயி எருசலேமிலிருந்து காத்துக்கு போய்வந்ததால்.
(2:41)
16. சாலமோன் ஆண்டவரிடம் கேட்ட பரிசு என்ன?
மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை, தீமை
பகுத்தறியவும் தேவையான
ஞானம் நிறைந்த உள்ளத்தை தந்தருளுமாறு கேட்டார். (3:9)
17. ஆண்டவர் சாலமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தாரா?
ஆம், இன்னும் அவர் கேளாத செல்வத்தையும், புகழையும் கொடுத்தார். (3:13)
18. சாலமோன் அரசர் முன், ஒரு பிள்ளைக்காக
வாதாடிய இரு பெண்களுக்கு
அவர் எவ்வாறு தீர்ப்பளித்தார்?
குழந்தையை இரண்டாக வெட்டி ஒரு பாதியை
ஒருத்தியிடமும், மற்றொரு
பாதியை இன்னொருத்தியிடமும் கொடுங்கள்
என்றார். (3:25)
19. குழந்தையின் உண்மையான தாய் கூறியது என்ன?
உயிரோடு இருக்கும் குழந்தையைக் கொல்லாமல்
மற்றவளிடமே
கொடுக்கும்படி கூறினாள். (3:26)
20. சாலமோனின் குரு யார்?
சதோக்கின் மகன் அசரியா (4:3)
21. சாலமோனின் தலைமைச்செயலர் யார்?
எலிகொரேபு, அகியா. (4:3)
22. சாலமோனுக்கு அமைச்சனாக இருந்தவர் யார்?
யோசபாத்து (4:3)
23. சாலமோனின் படைத்தலைவன் யார்?
பேனாயா. (4:4)
24. தலைமைக் கண்காணிப்பாளர் யார்?
அசரியா. (4:5)
25. அரசரின் ஆலோசகர் யார்?
சாபூது (4:5)
26. அரண்மனை மேற்பார்வையாளன் யார்?
அகிசார்;. (4:6)
27. கட்டாய வேலைக்காரன் மேற்பார்வையாளன் யார்?
அதோனிராம். (4:6)
28. சாலமோனிடமிருந்த குதிரை வீரர்கள் யார்?
12,000 (4:26)
29. சாலமோன் உரைத்த நீதிமொழிகள் எத்தனை?
3,000 (4:32)
30. சாலமோன் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை என்ன?
1,005 (4:32)
31. தீர் மன்னன் ஈராமிடம் சாலமோன் கேட்டது என்ன?
ஆலயம் கட்டியெழுப்ப கேதுரு மரங்களை வெட்டித்தருமாறு கேட்டார் (5:6)
32. மரத்திற்கு இணையாக சாலமோன் கொடுத்தது என்ன?
20,000 கலம் கோதுமையும், 200 குடம் பிழிந்து
வடிகட்டிய ஒலிவ் எண்ணெய்யும்
கொடுத்தார். (5:11)
33. சாலமோன் ஆலயம் கட்ட ஆரம்பித்தது எப்போது?
இஸ்ராயேல் மக்கள் வெளியேறின நாநூற்று எண்பதாம்
ஆண்டு. (6:1)
34. ஆண்டவருக்கென கட்டிய இல்லத்தின் அளவு என்ன?
நீளம் - 60 முழம்
அகலம் - 20 முழம்
உயரம் - 30 முழம் (6:2)
35. ஆலயம் முழுவதும் எவ்வகை பொருளால் மூடினார்?
பொன்னால் அவர் ஆலயத்தை மூடினார். (6:22)
36. கோயிலைக் கட்டியெழுப்ப எத்தனை ஆண்டுகள் ஆயின?
7 ஆண்டுகள் ஆயின. (6:38)
37. சாலமோனின் அரண்மனையைக் கட்டியெழுப்ப எத்தனை ஆண்டுகள் ஆயின?
13 வருடங்கள் ஆயின. (7:1)
38. சாலமோனுக்கு கட்டிட வேலையனைத்தையும் செய்து கொடுத்தவர் யார்?
வெண்கல வேலையில் கைதேர்ந்தவரான தீர் அரசர் ஈராம்.
(7:14)
39. கோவில் கட்டி முடித்த பிறகு சாலமோன் என்ன
செய்தார்?
அவர் உடன்படிக்கைப் பேழையை திருக்கோவிலுக்கு கொண்டு வந்தார் (8:1)
40. உடன்படிக்கைப் பேழையில் என்ன இருந்தது?
இரு கற்பலகைகள். (8:9)
41. கோவிலுக்குள் பேழை எடுத்துச் சென்ற பொழுது, கடவுளின் மாட்சி
வெளிப்பட்டது எவ்வாறு?
மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று.
(8:10)
42. சாலமோன் அரசரைப்பார்க்க வந்த அரசி யார்?
சேபா நாட்டு அரசி (10:1)
43. சேபா நாட்டு அரசி சாலமோனுக்கு கொடுத்தது
என்ன?
அவர் ஏறத்தாழ 480 கிலோ (120 தாலந்து) பொன்,
நறுமணப் பொருட்கள். (10:10)
44. சாலமோனுக்கு இருந்த மொத்தத் தேர்கள் எத்தனை?
1400 தேர்கள். (10:29)
45. சாலமோனுக்கு இத்தேர்களைச் செய்து கொடுத்தது
யார்?
எகிப்து நாட்டு மக்கள். (10:29)
46. சாலமோன் எவ்வகையான அயல்நாட்டுத் தொடர்பு வைத்திருந்தார்?
அவர் அயல் நாட்டுப் பெண் பார்வோனின் மகளை மணந்தார்.(11:1)
47. சாலமோன் மற்ற அயல்நாட்டுப் பெண்களையும்
மணந்தாரா?
ஆம், (11:1)
48. சாலமோன் செய்த பாவம் என்ன?
சீதோனின் தேவதையான அஸ்தரேத்தையும், அம்மோனியரின் அருவருப்பான
மில்க்கோமையும் வழிபட்டார்;. (11:5)
49. ஆண்டவர் அவரை எவ்வாறு தண்டித்தார்?
அவரது அரசை அவரிடமிருந்து பறித்து அவரின் பணியாளர்களிடம்
கொடுத்தார். (11:11)
50. சாலமோன் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தது
யார்?
எரோபவாம். (11:26)
51. எரோபவாம் ஏன் அவ்வாறு செய்தார்?
சாலமோனுக்கு அடுத்து இவர்தான் அரசர் என்று அகியா இறைவாக்கினர்
கூறியதால். (11:29)
52. சாலமோன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
40 ஆண்டுகள் (11:42)
53. சாலமோனுக்குப்பிறகு
யூதாவை ஆட்சி செய்தவர்
யார்?
அவர் மகன் ரெகபெயாம். (11:43)
54. ரெகபெயாம் அரசராக நியமித்த பிறகு எரோபவாம்
எங்கே ஓடினார்?
எகிப்திற்கு (12:2)
55. எரோபவாம் எகிப்திலிருந்து திரும்பியவுடன்
மக்கள் என்ன செய்தனர்?
அவரை இஸ்ராயேல் நாடு முழுவதற்கும் அரசனாக்கினார்.
(12:20)
56. இறையடியார் செமாயாவுக்கு கடவுள் அருளிய
வாக்கு என்ன?
சாலமோனின் மகனும்
யூதாவின் அரசனுமான ரெகபெயாமிடமும், யூதா,
பெஞ்யமின் வீட்டார்
அனைவரிடமும், ஏனைய மக்களிடமும் போய்ச் சொல்:
நீங்கள் படையெடுத்து உங்கள் சகோதரரான இஸ்ராயேலரோடுபோரிடச்
செல்ல வேண்டாம். எல்லோரும் அவரவர் வீட்டுக்குத்
திரும்புங்கள். இது
நிகழ்வது என்னாலேயே. (12:23-24)
57. எரோபவாம் குடியிருந்தது எங்கே?
ஏப்ராயிம் மலை நாட்டில் செக்கேமைக் கட்டியெழுப்பி
அங்கு குடியிருந்தான்.
(12:25)
58. எரோபவாம் செய்த பாவம் என்ன?
அவன் பொன்னால் இரு கன்றுக்குட்டிகளைச் செய்தான்.அவற்றிற்கு பலிப்பீடமும்
செய்தான். (12:28)
59. எரொபவாமுக்கு அடுத்து இஸ்ராயேலை ஆட்சி
செய்தவர் யார்?
அவன் மகன் நாதாபு. (15:27)
60. நாதாபைக் கொலை செய்தது யார்?
பாசா. (15:27)
61. ஏழுநாட்களே அரசாண்ட இஸ்ராயேல் அரசன் யார்?
சிம்ரி. 16:15)
62. வரப்போகும் வரட்சியைப்பற்றி ஆகாபிடம்
கூறியது யார்?
எலியா. (17:1)
63. எலியா எங்கு வாழ்ந்து வந்தார்?
கெரீத்து ஓடையருகில். (17:6)
64. எலியாவுக்கு உணவு கொடுத்தது யார்?
காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும்
இறைச்சியும் அவருக்கு
கொண்டு வந்தன. (17:6)
65. அங்கு ஓடை வற்றிப்போன பொழுது, ஆண்டவர்
எலியாவை எங்கு
செல்லுமாறு கூறினார்?
சீதோன் பகுதியில் இருக்கும் சாரிபாத்துக்கு. (17:8)
66. சாரிபாத்தில் அவருக்கு உணவளித்தது யார்?
ஒரு கைம்பெண். (17:9)
67. சாரிபாத்தின் கைம்பெண்ணுக்கு என்ன ஆனது?
அவருடைய ஒரே மகன் இறந்தான். (17:17)
68. அதற்கு எலியா என்ன செய்தார்?
சிறுவனுக்கு மீண்டும் உயிர் தந்தார். (17:22)
69. ஒபதியா என்பவர் யார்?
அரண்மனைக் கண்காண்ப்பாளன் ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர்.
(18:3)
70. எலியா ஆகாபிடம் கூறியது என்ன?
இப்போதே ஆள் அனுப்பி இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் கார்மேல்
மலையில் என் முன்னிலையில் ஒன்று திரட்டு
என்றார்.
(18:9)
71. ஆண்டவரின் வல்லமையை எலியா எவ்வாறு
நிருபித்தார்?
ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிமலையையும்,
விறகுக்கட்டைகளையும், கற்களையும், மணலையும் ,
சுட்டெரித்து
வாய்க்கால் நீரையும் வற்றச் செய்தார். (18:38)
|
|