• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 பதுவைப் பதியரான புனித அந்தோனியார் மன்றாட்டு மாலை

   

 பதுவைப் பதியரான புனித அந்தோனியார் மன்றாட்டு மாலை 1

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியாஸ்திரீகளுக்குள்ளே உத்தம அர்ச். கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பக்திச்சுவாலகருக்கு ஒத்தவராகிய அர்ச். பிரான்சீஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பதுவைப் பதியரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரலோகத் திருவின் திருப்பெட்டியான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தபசில் பற்றுள்ள அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தருமத்தை மிகவும் பின்தொடர்ந்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். சிலுவையை மிகவும் நேசித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தூய்மையில் லீலியயன்கிற புஷ்பமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இஸ்பானிய சீமைக்கு நவநட்சத்திரமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச் சத்தமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவிசுவாசிகளுக்குப் பயங்கரமாக உபதேசித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசாசுகளை நடுநடுங்கச் செய்கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புண்ணியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மீனோரென்கிற சந்நியாசிகளுக்குப் படிப் பினையான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போஸ்தலருடைய கொழுந்தான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆச்சரியங்களைச் செய்கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சலிப்புள்ளவர்களுக்கு ஆறுதல் சொல்லுகிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஊமைகளைப் பேசச் செய்கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உண்மைகளைப் போதிக்கிற உபதேசியாரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசாசுக்களை மிரட்டி ஓட்டுகிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதிக்காரர்களைக் குணமாக்குகிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரித்தவர்களைச் சர்வேசுரனுடைய உதவியினாலே, உயிர்ப்பித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிறவிக் குருடருக்குக் கண்கொடுத்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

காணாமற் போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இழந்துபோன பொருட்களைக் கண்டெடுக் கச் செய்கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக் கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரலோகத்திற்குச் சுதந்தரவாளியான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தரித்திரருக்கு இரத்தினமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நஞ்சிருக்கக் கண்டு போசனம் அருந்தினவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புண்ணியமென்கிற ஞான வெள்ளாண்மையைப் பல நாடுகளில் விளைவித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகமென்கிற அபத்தத்தைப் புறக்கணித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமுத்திரத்தில் உபத்திரவப்படுகிற எத்தனையோ பேர்களை இரட்சித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மைப் பார்த்து வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு அன்பரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவரீரைப் புகழுகிறவர்களுக்காக மன்றாடுகிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எண்ணிறந்த ஆத்துமங்களைப் பரலோகத்தில் சேர்ப்பித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நன்னாக்கழியாத நற்றவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிறு குழந்தை ரூபத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தினவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச். அந்தோனியாரே, சூரத்தனமுள்ள மேய்ப்பரே, கஸ்திப்படுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருத்துவிக்கிறவருமாய்ப் பாவ அக்கினியுடைய காந்தியைச் சீக்கிரத்திலே அமர்த்துகிற வரும் உன்னத பரலோகத்திலிருக்கிற பிதாவான வர் இம்மையினுடைய அவதிக்குப் பிற்பாடு எளிய வர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருள மன்றாடும்.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

பிதாவாகிய சர்வேசுரா சுவாமி, உமது திருச்சபையானது அர்ச். அந்தோனியாருடைய ஞான உதவியினாலே உரம் பெற்றிருக்கவும், நித்திய ஆனந்தத்தை அனுபவிக்க நாங்கள் பாத்திரமாயிருக்கவும், உம்முடைய ஸ்துதியரான அர்ச். அந்தோனியாருடைய திரு நாமத்தைக் கொண் டாடுகிற நாங்கள் அவருடைய புண்ணிய மாதிரிகையை அனுசரித்துக் கொண்டு பேரின்ப மோட்ச இராச்சியத்தில் சேரவும் அனுக்கிரகம் செய்தருளும். உம்முடைய திருச்சபைக்குச் சந்தோஷம் வருத்துவிக்க வேண்டு மென்றும் தேவரீரை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் சேசுகிறீஸ்துநாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.

ஆமென்.



புனித அந்தோனியாரை நோக்கி ஜெபம், வேண்டுதல் மற்றும் புகழ்மாலை.



இப்புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே! தூய்மை துலங்கும் லீலியே! விலைமதிக்கப்படாத மாணிக்கமே! விண்ணுலக மண்ணுலக காவலரே!

கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சந்சீவியானவரே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோணியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே! உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ!

எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ! நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ? உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும்.

நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்? நீர் ஆதரியா விட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்?

தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூய்யதான தாபரமே! தயைக்கடலே! தவிப்பவர்களுக்குத் தடாகமே! தனித்தவர்க்கு தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் ஒடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம்.

எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயனற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ! அப்படி ஆகுமோ? ஐயா எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம் எங்களைக் கையேற்றுக் கொண்டு ஆசீர்வதித்தருளும். ஆமென்.

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்