தூய வியான்னி | 1187-புனிதரே அருள்மரிய |
புனிதரே அருள்மரிய வியான்னியே புகழ்கின்றோம் குருக்களின் காவலரே ஆர்ஸ் என்னும் கிராமம் அதிசயிக்க அருள்பணி ஆற்றிய குரு நீரே அகிலமும் வாழ் பங்குக் குருக்களுக்கு அரிய முன்னோடி ஆகினீரே ஆ.. ஆயிரம் ஆயிரம் மனிதர்களை ஆண்டவன் அரசில் சேர்த்தவரே எளிமை தாழ்ச்சி செபவாழ்வு இடைவிடா உழைப்பு இவற்றோடு (2) பரிவுடன் பாவம் பொறுத்திடவே பலமணி நேரம் உழைத்தீரே ஆ.. அமைதியில் மறைந்து வாழ்ந்தவரே ஆண்டவன் அருளால் நிறைந்தவரே |