Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய  குழந்தை தெரசாள் வானின் அருளினை பொழிபவளே-  

மலரே சிறு மலரே எம் பங்கின் பாதுகாவலியே
வானில் உம் கொடி பட்டொளி வீசி பறக்குதம்மா
எழில் கொஞ்சியே அருள் தாங்கியே
பறக்குதம்மா வானில் பறக்குதம்மா

பல்லவி:
வானின் அருளினை பொழிபவளே - தூய
வாழ்வினை அணியாய் அணிந்திட்ட தெரசே
எம் பங்கின் காவலி ஆனவளே-என்றும்
எம்மையும் ஆசிரால் நிறைப்பவளே
எமதன்பே எமதுயிரே
வாழ்க வாழ்க தெரசே வாழ்க
உம் புகழ் வாழியவே
தருக தருக உம் ஆசி தருக எம்மையும் காத்திடுவீர்.

சரணம்
1) உன் கொடி வானில் உயருதம்மா - எங்கள்
உள்ளங்கள் உயர்ந்திட வேண்டுமம்மா -2
வெற்றியின் மகிழ்வினை காணச் செய்து
வாழ்த்தியே பாடிட வரம் அருள்வீர்
தெரசாளே எமக்கு வரம் அருள்வீர்
வாழ்க வாழ்க தெரசே வாழ்க உம் புகழ் வாழியவே
தருக தருக உம் ஆசி தருக எம்மையும் காத்திடுவீர்.

சரணம்- 2
உம் பதம் நாடியே வருவோர்க்கு - என்றும்
உள்ளத்தில் அமைதியை மலரச் செய்வீர்
தேவையில் எம்மையும் தேடி வந்து -2
தீங்கில்லா வாழ்வினை எமக்கருள்வீர்
தெரசாளே எமக்கு வரம் அருள்வீர்
வாழ்க வாழ்க தெரசே வாழ்க உம் புகழ் வாழியவே
தருக தருக உம் ஆசி தருக எம்மையும் காத்திடுவீர்.



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!