புனித சூசையப்பர் | சூசை தந்தையே |
சூசை தந்தையே உன் நாமம் வாழ்கவே இன் நன்நாளிலே வரங்கள் வேண்டியே உன் பாதம் கூடி வந்தோம் உன் அருள் துணை நாடி வந்தோம் கடின உழைப்பும் நேர்மையும் கள்ளமில்லா உள்ளமும் உழைத்து வாழவேண்டும் என்ற ஆசையும் உன்னகம் கொண்டிருந்தால் என் வாழ்விலே......... என் வாழ்விலே என் நாளுமே உம் ஆசை எமக்கின்று வரவேண்டுமே அதை வரமாக யாமின்று பெறவேண்டுமே அறிவும் ஞானமும் விவேகமும் பகுத்து அறியும் ஆற்றலும் தூய ஆவியின் துணைகொண்டு வளர மகனுடனேயிருந்தால் உன் மகன் போலவே........... உன் மகன் போலவே நாங்கள் வளர என்னோடு நீர் என்றும் வரவேண்டுமே அதை வரமாக யாமின்று பெறவேண்டுமே |