1092-மருதமடுப் பதியில் |
மருதமடுப் பதியில் கருணை மழை பொழியும் திருமகள் வருவீரே எம் திருமகள் வருவீரே மண்ணில் மனிதகுலம் உண்டு மனம்மகிழ அண்ணல் யேசுவைத் தந்த அமலஉற்பவ மாதே(மருத. . .) நாட்டில் நலன்கள் குன்றி நாங்கள் வருந்தும் வேளை காட்டில் இருந்து வந்து கண்ணீர் துடைப்பவளே (மருத. . .) ஏங்கும் தமிழர் நிலம் காவல் புரியும் தாயே தூங்கும் தமிழர் மனம் மாற்றம் கொடுப்பவளே (மருத. . .) சிந்தும் குருதி நின்று தங்கும் தமிழ் மண் தந்து வெந்து மடிந்த மக்கள் நெஞ்சம் நி றைத்தவளே (மருத. . .) எங்கள் நகரில் தமிழ் பங்கின் நலன்கள் நல்கி வேண்டும் வரங்கள் தந்து நெறிகளும் காப்பவளே (மருத. . .) |