1072-ஞானம் நிறை கன்னியே |
ஞானம் நிறை கன்னியே நாதனைத் தாங்கிய ஆலயமே மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2 பலி பீடமாய் அலங்கரித்தாயே ஞானம் பாவ நிழலே அணுகா பாதுகாத்தார் உன்னையே பரமன் - 2 தாய் உதரம் நீ தரித்திடவே தனதோர் அமல தளம் எனக்கொண்டார் - ஞானம் வாழ்வோர் அனைவரின் தாயே 2 வான் உலகை அடையும் வழியே வாஞ்சையோடணைக்கும் தாரகையே வாடிய மனிதர் கதி எனக் கொண்டோம் - ஞானம் |