நன்றிப்பாடல்கள் | நன்றியின் கரங்களைக் குவித்திடுவோம் |
நன்றியின் கரங்களைக் குவித்திடுவோம் நன்மைகள் நல்கிடும் நாயகனே சொல்ல இயலா நன்மைகளை நாளும் பாடி மகிழ்ந்திடுவோம் வாழ்வே நன்றி வழியே நன்றி இதயம் கமழும் நன்றி மேகமாய் நின்று மழைபொழிந்து தாகத்தைத் தீர்க்கும் உன் அன்பினுக்கு பாலை இதயம் பலன் தரவே பதர்கள் தீர்த்திடுவாய் அலைகள் பாடித்துதிக்கும் - எம்மில் இன்ப கீதம் பிறக்கும் தனிமரமாகத் தவித்து நின்றோம் கனிதரும் மரமாய் கழித்து விட்டாய் காலமெல்லாம் உன்னுடனே இணைந்து மகிழ்ந்திடுவோம் உலகை வென்று எழுவோம் - எம்மில் உறவை வளர்த்து |