Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

The Mass(Vithlai vinothar) 11  
ஆண்டவரே இரக்கமாயிரும் (2)
கிறீஸ்துவே இரக்கமாயிரும் (2)
ஆண்டவரே இரக்கமாயிரும் (2) இரக்கமாயிரும்



உன்னதத்தில் இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக
உலகிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக

புகழ்கின்றோம் இறைவனை வாழ்த்துகின்றோமே
மகிமையோடு ஆராதித்து போற்றுகின்றோமே
உமது மேலாம் மாட்சிமைக்கு நன்றி கூறுகின்றோம்
ஆண்டவர் இயேசுவின் நிகரில்லா அரசை
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தையே
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவே

ஆண்டவராம் இறைவனே இதயத்தைத் தருவேன்
தந்தையினின்று செபித்திடும் இறை மகனே நீர்
உலகின் பாவம் போக்கிடும் மீட்பர் இயேசுவே
எம்மீது இரங்கி செபத்தை ஏற்று ஆட்கொள்ளுவீரே
தந்தையின் வலத்தில் வீற்றிருந்து எம்மை ஆள்பவரே
மாபரன் இயேசு கிறிஸ்துவே நீர் தூயவர் ஒருவரே
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
தூய ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவரே. ஆ....ஆ....ஆ....ஆமென்.


அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
ஆண்டவர் படைத்த நாளிதுவே
அக்களிப்போம்  இன்று அகமகிழ்வோம்
ஆனந்தமுடனே பாடிடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)


தூயவர் தூயவர் தூயவர்
மூவுலகிறைவனாம் ஆண்டவர்
வானமும் வையமும் யாவுநும்
மாட்சிமையால் நிறைந்துள்ளன
உன்னதங்களிலே ஓசான்னா (2)

ஆண்டவர் பெயரால் வருபகிறவர்
ஆசி நிரம்பப் பெற்றவரே
உன்னதங்களிலே ஓசான்னா (2)
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா


கிறீஸ்து மரித்தார்
கிறீஸ்து உயிர்த்தார்
கிறீஸ்து மீண்டும் வருவார்



விண்ணகத்தில் வாழும் எங்கள் அன்புத் தந்தையே
உமது நாமம் வாழ்கவே உமது அரசு வருகவே
உமது சித்தம் விண்ணவர்போல் மண்ணில் ஆகுக
வாழ்க வாழ்க வாழ்கவே வானகத் தந்தை வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே அவர் ஆட்சி என்றும் வாழ்கவே

எமது உணவை அனுதினமும் எமக்குத் தாருமே
எமக்குத் தீமை செய்தவரை யாம் பொறுப்பது போலவே
எமது பாவம் யாவற்றையும் பொறுத்தருள்வீரே
வாழ்க வாழ்க வாழ்கவே வானகத் தந்தை வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே அவர் ஆட்சி என்றும் வாழ்கவே

எம்மைத் தொடர்ந்து வாட்டிடும் சோதனைகளை
கண்டுணரச் செய்யுமே வெல்ல வலிமை தாருமே
தீங்கனைத்திலிருந்து எம்மைக் காத்தருள்வீரே
வாழ்க வாழ்க வாழ்கவே வானகத் தந்தை வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே அவர் ஆட்சி என்றும் வாழ்கவே



உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச்செம்மறியே!
எம்மேல் இரக்கம் வைத்தருளும்
உலகின் பாவம்  போக்கும் இறைவனின் திருச்செம்மறியே!
எம்மேல் இரக்கம் வைத்தருளும்
உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச்செம்மறியே!
எமக்கு அமைதி தந்தருளும்.
எமக்கு அமைதி தந்தருளும்.





 

அப்பா பிதாவே பிதாவே உம் தூய நாமம் வாழ்கவே
உம்தூய அரசு வருகவே