Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருப்பலிப் பாடல்கள் வானமும் பூமியும் படைத்தவராய்  
வானமும் பூமியும் படைத்தவராய்
கடவுள் ஒருவர் இருக்கின்றார்
தந்தை சுதன் தூய ஆவியுமாய்
தம்மில் உறவுடன் வாழ்கின்றார்

பரிசுத்த ஆவியின் வல்லமையால்
திருமகன் மரியிடம் மனுவானார்
மனிதரைப் புனிதராய் மாற்றிடவே
புனிதராம் கடவுள் மனிதரானார்

பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்
சிலுவையில் மரித்து அடக்கப்பட்டார்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்
மரணத்தின் மீது வெற்றி கொண்டார்

பரலோகம் வாழும் தந்தையிடம்
அரியணை கொண்டு இருக்கின்றார்
உலகம் முடியும் காலத்திலே
நடுவராய் திரும்பவும் வந்திடுவார்

திருச்சபை உரைப்பதை நம்புகிறோம்
புனிதர்கள் உறவை நம்புகிறோம்
சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை
விசுவாசப் பொருளாய் நம்புகிறோம்

தூய நல் ஆவியாம் இறைவனையும்
தூயவராக்கும் ஒற்றுமையையும்
புனிதராம் இயேசுவின் மாட்சியையும்
புனிதநல் வாழ்வுக்காய் ஏற்கின்றோம் ஆ...ஆ...ஆ...ஆமேன்

 

அப்பா பிதாவே பிதாவே உம் தூய நாமம் வாழ்கவே
உம்தூய அரசு வருகவே