திருப்பலிப் பாடல்கள் | வானமும் பூமியும் படைத்தவராய் |
வானமும் பூமியும் படைத்தவராய் கடவுள் ஒருவர் இருக்கின்றார் தந்தை சுதன் தூய ஆவியுமாய் தம்மில் உறவுடன் வாழ்கின்றார் பரிசுத்த ஆவியின் வல்லமையால் திருமகன் மரியிடம் மனுவானார் மனிதரைப் புனிதராய் மாற்றிடவே புனிதராம் கடவுள் மனிதரானார் பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார் சிலுவையில் மரித்து அடக்கப்பட்டார் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் மரணத்தின் மீது வெற்றி கொண்டார் பரலோகம் வாழும் தந்தையிடம் அரியணை கொண்டு இருக்கின்றார் உலகம் முடியும் காலத்திலே நடுவராய் திரும்பவும் வந்திடுவார் திருச்சபை உரைப்பதை நம்புகிறோம் புனிதர்கள் உறவை நம்புகிறோம் சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை விசுவாசப் பொருளாய் நம்புகிறோம் தூய நல் ஆவியாம் இறைவனையும் தூயவராக்கும் ஒற்றுமையையும் புனிதராம் இயேசுவின் மாட்சியையும் புனிதநல் வாழ்வுக்காய் ஏற்கின்றோம் ஆ...ஆ...ஆ...ஆமேன் |