Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருப்பலிப்பாடல் 9  
ஆண்டவரே இரக்கமாயிரும் (2)
கிறீஸ்துவே இரக்கமாயிரும் (2)
ஆண்டவரே இரக்கமாயிரும் (2)



உன்னதங்களிலே கடவுளுக்கு
மாட்சி உண்டாகுக
உலகினிலே நல்மனத்தோருக்கு
அமைதி உண்டாகுக

புகழ்கின்றோம் யாம் உம்மையே
வாழ்த்துகின்றோம் இறைவனே
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை
மாட்சிப்படுத்துகின்றோம் யாம்

உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவனே
இணையில்லாத விண்ணரசே

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்
வல்ல தந்தை இறைவனே
ஒரே மகனாக உதித்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்து இறைவனே

ஆண்டவராகிய இறைவனே
இறைவனின் திருச் செம்மறியே
தந்தையினின்று என்றென்றுமாக
உதித்த இறைவன் மகனே நீர்

உலகின் பாவம் போக்குபவரே
நீர் எம்மீது இரங்குவீர்
உலகின் பாவம் போக்குபவரே
எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே.......... நீர் ஒருவரே தூயவர்........
நீர் ஒருவரே ஆண்டவர்....... நீர் ஒருவரே உன்னதர்........
தூய ஆவியோடு தந்தை இறைவனின்
மாட்சியில் இருப்பவர் நீரே - ஆமென்..ஆமென்....ஆமென்




தூயவர்...... தூயவர்....... தூயவர் .......
வானின் படைகளின் கடவுளாம் ஆண்டவர்
விண்ணகமும் மண்ணகமும் மாட்சியால் நிறைந்துள்ளன
உன்னதங்களிலே ஓசான்னா உன்னதங்களிலே ஓசான்னா ஓசான்னா
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்
உன்னதங்களிலே ஓசான்னா உன்னதங்களிலே ஓசான்னா (2)





உலகத்தின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே!
எம்மேல் இரக்கம் வையும்
உலகத்தின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே!
எம்மேல் இரக்கம் வையும்
உலகத்தின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே!
எமக்கு அமைதி அருளும். (3)

 

அப்பா பிதாவே பிதாவே உம் தூய நாமம் வாழ்கவே
உம்தூய அரசு வருகவே