Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருப்பலிப்பாடல் 2  
ஆண்டவரே இரக்கமாயிரும் (2)
கிறீஸ்துவே இரக்கமாயிரும் (2)
ஆண்டவரே இரக்கமாயிரும் (2)




உன்னதங்களிலே கடவுளுக்கு
மாட்சி உண்டாகுக.
உலகினிலே நன் மனத்தோருக்கு
அமைதி ஆகுக
உம்மை புகழ்கின்றோம்.
உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம்.
உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே,
இயேசு கிறிஸ்துவே, ஆண்டவராகிய இறைவா,
இறைவனின் செம்மறியே, தந்தையின் திருமகனே,
உலகின்பாவங்களைப் போக்குபவரே,
எங்கள்மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களை போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும். ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
 நீர் ஒருவரே தூயவர், நீர் ஒருவரே ஆண்டவர்,
நீர் ஒருவரே உன்னதர். தூய ஆவியாரோடு,
தந்தையாகிய இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.




தூயவர், தூயவர், தூயவர். வான் படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஓசன்னா.
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஓசன்னா.



உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே! எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே! எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே! எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.

 

அப்பா பிதாவே பிதாவே உம் தூய நாமம் வாழ்கவே
உம்தூய அரசு வருகவே