Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருப்பலி பாடல் 16  

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறீஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்





உன்னதத்தில் இறைவனுக்கு
மாட்சிமை உண்டாகுக
உலகில் நல்மனத்தவர்க்கு
அமைதியும் உண்டாகுக

புகழ்கின்றோம் யாம் உம்மையே
வாழ்த்துகின்றோம் இறைவனே
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை
மகிமைப்படுத்துகின்றோம்


உம் மேலாம் மாட்சிமைக்காய்
நன்றி கூறுகின்றோம்
ஆண்டவராம் இறைவனே
இணையில்லாத விண்ணரசே

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்
தேவ தந்தை இறைவனே
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்து இறைவனே

ஆண்டவராம் இறைவனே
இறைவனின் செம்மறியே
தந்தையினின்று நித்தியமாகச்
செனித்த இறை மகனே

உலகின் பாவம் போக்குபவரே
நீர் எம்மீது இரங்குவீர்
உலகின் பாவம் போக்குபவரே
எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்

தந்தை வலம் இருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்
ஏனெனில் இயேசுவே நீர் ஒருவரே தூயவர்
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே. ஆ........மென்.. ஆ........மென்..




அல்லேலூயா.....அல்லேலூயா... அல்லேலூ.....யா
அல்லேலூயா.....அல்லேலூயா... அல்லேலூ.....யா
ஆண்டவர் படைத்த நாளிதுவே
அக்களிப்போம் இன்று அகமகிழ்வோம்
ஆனந்தமுடனே பாடிடுவோம் அல்லேலூ.....யா
அல்லேலூயா.....அல்லேலூயா... அல்லேலூ.....யா
அல்லேலூயா.....அல்லேலூயா... அல்லேலூ.....யா





நிறைவாக்கும் தெய்வமே வரம் தாரும் தேவனே

அன்பினிறைவா எங்கள் தலைவா திருச்சபைக்காக ஜெபிக்கின்றோம்
எங்கள் திருத்தந்தை ஆயர்கள் குருக்களும் கன்னியர் வேதியர் யாவரும்
உம்வழியில் மக்களை நடத்திச் சென்றிட
வரம் தாரும் வரம் தாரும்


அமைதி தரும் எங்களிறைவா நாட்டிற்காக ஜெபிக்கின்றோம்
எங்கள் தலைவர்கள் சுயநலமின்றி உழைக்கவும்
நேர்மை உண்மையோடு நடக்கவும்
அமைதி நீதி எங்கும் நிறையும் நாடாக
வரம் தாரும் வரம் தாரும்

கருணையுள்ளம் கொண்ட இறைவா பங்கிற்காக ஜெபிக்கின்றோம்
முதியோர் பெரியோர் இளையோர் இல்லாதவர்கள்
ஆர்வம் கொண்டுழைக்கும் பணியாளர்கள்
உடல் உள்ள சுகத்தோடு என்றும் வாழ்ந்திட
வரம் தாரும் வரம் தாரும்





தூயவர்.... தூயவரே
மூவுலகின் ஆண்டவரே
வானமும் வைய்யகமும்
உம் மாட்சியால் நிறைந்துள்ளன
உன்னதங்களில் ஓசான்னா (2)

ஆண்டவர் பெயரால் வரும்
ஆசி பெற்றவர்
உன்னதங்களிலே ஓசான்னா (2)




உலகின் பாவங்களை போக்கும் செம்மறியே!
எங்கள் மேல் இரக்கம் வையும் (2)
உலகின் பாவங்களை போக்கும் செம்மறியே!
எங்கள் மேல் இரக்கம் வையும் (2)
உலகின் பாவங்களை போக்கும் செம்மறியே!
அமைதியைத் தந்தருளும் அமைதியைத் தந்தருளும்



 

அப்பா பிதாவே பிதாவே உம் தூய நாமம் வாழ்கவே
உம்தூய அரசு வருகவே