குருத்துவப் பாடல்கள் | உனை அழைத்ததும் நான் |
உனை அழைத்ததும் நான் உயிர் கொடுத்ததும் நான் உள்ளங்கையில் உனைப் பொறித்ததும் நான் பெயர் சொல்லி அழைத்தேன் உனை அள்ளி அணைத்தேன் - 2 மார்போடு தாலாட்டி உருவாக்கினேன் உமை குருவாக்கினேன் உருவாக்கினேன் உனை உருவாக்கினேன் குருத்துவ பணி நிலைக்கு உம்மை தேர்ந்தெடுத்தோம் அபிஷேக எண்ணெயினால் உமை ஆட்கொண்டோம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கிணங்கி ஆண்டவர் மந்தையினை மேய்த்திட வந்தோம் ஏழைக்கும் எளியோர்க்கும் நற்செய்தி நவில நீதியும் நேர்மையும் உன்வழியாய் பகிர உருவாக்கினேன் உமை குருவாக்கினேன் கருவாக்கினேன் என் உருவாக்கினேன் திருப்பலி நிறைவேற்றி கல்வாரி பலி செலுத்த புனிதத்தின் ஆவியினால் புதுப்பிறப்பளித்தோம் திருவருட்சாதனத்தில் புத்துயிர் அளித்திடும் நீர் மாபரன் இயேசுவின் மறுவுருவன்றோ ஒப்புரவாய் பாவத்திற்கு மன்னிப்பு வழங்க தூய்மையின் லீலியாய் மனுக்குலம் துலங்க உருவாக்கினேன் உமை குருவாக்கினேன் கருவாக்கினேன் என் உருவாக்கினேன் |