குருத்துவப் பாடல்கள் | 1610 -ஐந்தைந்து ஆண்டுகள் |
ஐந்தைந்து ஆண்டுகள் பொன்போலப் பொதித்தென்னை கை மீது வைத்திருந்தாய் தெய்வீகப் பாதையில் அன்பான சேவையில் என்னை நீ காத்து வந்தாய் நாள்தோறும் பலியில் நான் வாழும் நெறியில் நல்லாயன் காட்டி நின்றாய் நல்லாயன் காட்டி நின்றாய் முன்வந்த என்னை உனதாக்கினாய் உன்கையில் வாழ்வை புதிதாக்கினாய் வெறும் கல்லும் கனியாகி சிறுசொல்லும் கவியாகி அகல் கூட நிலவாகி வெயில் தந்ததே உன் அருளால் என்பணிகூட பலன் தந்ததே இன்பத்தில் துன்பத்தில் துணையாகினாய் - என் சேவை அனைத்திற்கும் பொருளாகினாய் விழி நீரைத் துடைக்கின்ற விரல் காணும் இதம் போல வழியெங்கும் பணி செய்து நிறைகாணவே உன் அழியாத மகிழ்வாலே எனை மூடினாய் |