Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

குருத்துவப் பாடல்கள் 1609 -என் தலைவா என்னை  

என் தலைவா என்னை ஏன் அழைத்தாய்
பின்னே வாவென்று ஏன் மொழிந்தாய் - 2
தகுதியில்லா ஏழைக்கிந்த
தகுதியை ஏன் அளித்தாய்

தனியே நான் நின்ற வேளை - நல்ல
இசை போல் மனம் புகுந்தாய் - 2
பயந்தேன் நான் மிக வியந்தேன்
நீ என்னை அழைத்தாய் - நெஞ்சம்
ஒன்றாய் இணைத்துக் கொண்டாய்
வாழும் காலம் யாவும் உன்னோடு
தினமும் உழைக்கக் கேட்டாய்
என்ன நீ என்னில் கண்டாய்

பாதத்தில் நான் அமர்ந்திருந்தேன் - அது
போதும் என்றிருந்தேன் - 2
எழுந்தாய் நீ மெல்ல குனிந்தாய் ஏழைகள்
பாதம் கழுவியே பாடம் சொன்னாய்
எளிய மனிதர் துணையாய் எந்நாளும்
உலகில் வாழப் பணித்தாய்
என்ன நீ என்னில் கண்டாய்


 

மகிழ்ந்திடாய் மாநிலமே - உந்தன் மைந்தரின் மாட்சியிலே - இன்று
பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால் - என்று மகிழ்ந்திடாய் திரு மறையை