மரித்தோர் பாடல்கள் | 1587 -மண்ணில் வாழ்ந்து |
மண்ணில் வாழ்ந்து செல்லும் நண்பா விண்ணில் இறைவன் இன்பம் தருவார் இன்று உன்னைப் படைத்த இறைவன் இன்று உன்னை அழைக்கின்றார் படைப்பின் இறைவன் படைப்பைக்காண கடைக்கண் ஒன்றைக் காட்டினான் பார்த்த மனிதன் மயக்கம் கொண்டு படைத்தவனிலே மூழ்கினான் உலகில் நீயும் வாழ்ந்த காலம் உயர்ந்த வாழ்வின் பயணமே சேர்ந்த உறவும் இணைந்த உள்ளமும் தொடர்ந்து வாழும் என்றுமே இன்று உறவு நாளை பிரிவு மனிதன் வாழும் ஏட்டிலே என்றும் அழியா உறவு உண்டு இறைவன் வாழும் வீட்டிலே இந்த உலகில் ஒன்று சேர்ந்து வாழ்ந்த காலம் கொஞ்சமே எந்நாளும் உந்தன் அன்பை நினைந்து வாழ்த்தும் எந்தன் நெஞ்சமே |