Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் -மனம் வருந்தி நீ தூய வெள்ளி

மனம் வருந்தி நீ வருவாயா
மனம் திருந்தி நீ வருவாயா
கல்வாரி நோக்கி கால்களைக் கடித்து
கருணை தேவனை பின்தொடர - மனம் வருந்தி
பழிகளைச் சுமத்தினரே பாவிகள் ஒன்றுசேர்ந்து
சிலுவை சாவினையே சுமத்தி இகழ்ந்தனரே - (அன்று) -2

1. கொடிய சிலுவையினை தோள்மேல் வைத்தனரே
கல்வாரி மலையினுக்கு இழுத்து சென்றனரே - (அங்கு) -2

2. சிலுவையின் பளுவாலே விழுந்தார் தரையினிலே
துணிவாய் எழுந்து நின்று தொடர்ந்தார் பயணத்தையே-அவர் -2

3. அன்னையின் கண்களிலே அழுகையின் நீர்த்துளிகள்
உள்ளம் நொந்தாரே இறைசித்தம் உணர்ந்தாரே - (அன்று) -2

4. இயேசுவின் துன்பத்திலே இணைந்தார் சீமோனும்
சிலுவை சுமந்ததனால் சிந்தையில் நின்றாரே - (நம்) -2

5. துணியுடன் ஓடிவந்தாள் துணிவான மங்கை அவள்
துயரத்தைத் துடைத்தாளே முகத்தைப் பெற்றாளே - (தூய) -2

6. உடல் பலம் நீங்கியதால் விழுந்தார் மறுமுறையும்
தடுமாறி எழுகின்றார் பயணத்தைத் தொடர்கின்றார் - (தன்) -2

7. மங்கையர் கூட்டம் அங்கே மனம் நொந்து அழுகின்றார்
எனக்காக அழவேண்டாம் ஆறுதல் மொழிந்தாரே - (இயேசு) -2

8. மூன்றாம் முறையாக சோர்ந்து விழுந்தாரே
மனிதரை மீட்டிடவே முயன்றே எழுகின்றார் - (இயேசு) -2

9. உடைகளைப் பறித்திடவே சீட்டுப் போட்டனரே
ஆடையைப் பிடுங்கிடவே தசையைக் கிழித்தனரே - (அவன்) -2

10 கூரிய ஆணிகளால் சிலுவையில் அறைந்தனரே
கள்வர்கள் நடுவினிலே கொடுமையாய் நிறுத்தினரே - (அன்று) -2

11. அனைத்தும் முடிந்ததென்று கண்களை மூடுகின்றார்
தன்னை அர்ப்பணித்து இறைசித்தம் முடிக்கின்றார் - (அந்தோ) -2

12. தாயின் மடியினிலே சாய்ந்தார் சரமாக
ஐய்யோ துடிக்கின்றார் கண்ணீர் வடிக்கின்றார் - (அன்னை) -2

13.மானிட மைந்தனுக்கோ தலைசாய்க்க இடமுமில்லை
மாற்றான் கல்லறையில் அடக்கம் செய்தனரே -2



 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?