Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1555-மைந்தனார் சிலுவை மீது தூய வெள்ளி

மைந்தனார் சிலுவை மீது
மாதுயருடன் வருந்த
நொந்தழுதாள் தாய் மரி

1- திருமகன் அறையுன்ட
சிலுவை அடியில் நின்ற
தேவதாய் நொந்தழுதாள்.

2- வேதனைக் கடலமிழ்ந்த
மாதா ஆத்துமம் வதைய
வாள் பாய்ந்தூடுருவிற்று

3- நேய மகனை இழந்த
தாய் அனுபவித்த துயர்
தானுரைக்க நாவுண்டோ

4- அருமையாய் ஈன்ற சுதன்
அவஸ்தையைக் கண்டிழகி
உருகிப் புலம்பினாள்.

5- இரட்சகர் தம் திருத்தாயார்
இக்கொடிய வாதைப்பட
யார் கண்டழாதிருப்பார்

6- திருமகன் துயரத்தால்
உருகும் தாயைக் கண்டுள்ளம்
கரையாதார் யாருண்டு

7- அன்புள்ள தன் திருமகன்
துன்பதுயர் அவஸ்தையுள்
தன் சீவன் தரக்கண்டாள்

8- பட்ச வூரணி மாதவே
பரிதபித்தே உம்மோடு
பாவி நான் அழச் செய்யும்

9- ஆதி யேசுவை நேசித்தே
யான் அவர்க்கினியனாக
அன்பால் என்னுள்ளம் சுடும்

10- தேவதாயே தயை செய்து
பாவி என்னிருதயத்தில்
யேசு காயம் பதியும்

11- சிலுவை அடியில் நின்று
தேவதாயே உம்மோடே நான்
புலம்ப ஆசிக்கின்றேன்

12- கன்னியர் அரசே தாயே
என் கண்ணீரை உம்முடைய
கண்ணீரோ டேற்றருளும்

13- அன்பாய் அக்கினியை மூட்டி
அடியேனைத் தீர்வை நாளில்
ஆதரிப்பீர் கன்னியே

14- மண் உடல் உயிர் பிரிந்ததால்
வான் மோட்சத் தாத்துமம் சேர்ந்து
வாழவும் செய்தருளும்.


 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?