Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1539-எனக்காக இறைவா எனக்காக தூய வெள்ளி
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக - 2

1) பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்

2) தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்

3) விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு

4) தாங்கிடவொண்ணாத் துன்பங்கண்டே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள்

5) மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தம்மை உம்மோடு

6) நிலையாய் பதிந்தது உன் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில்

7) ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்

8) விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்

9) மூன்றாம் முறையாய் வீழ்கையிலே - கால்
ஊன்றி நடந்திட மெய் நொந்தீர்

10) உடைகளைக் களைந்திட உமைத் தந்தீர் - இரத்த
மடைகள்திறந்திடமெய் சோர்ந்தீர்

11)பொங்கிய உதிரம் தெரிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே

12) இன்னுயிர் அகன்றது உம்மை விட்டு - பூமி
இருளினில் சூழ்ந்தது ஒளிகெட்டு

13) துயருற்றுத் துடித்தார் மனம்நொந்து - அன்னை
உயிரற்ற உடலினை மடிசுமந்து

14) ஒடுங்கி உமதுடல் பொதியப்பட்டு - நீர்
அடங்கிய கல்லறை உமதன்று
 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?