Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1538-பாடுவாய் என் நாவே மாண்பு குருத்து ஞாயிறு
பாடுவாய் என் நாவே மாண்பு
மிக்க உடலின் இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த
வயிற்றுதித்த கனியவர் தம்
பூதலத்தை மீட்கச் சிந்தும்
விலை மதிப்பில்லா துயர்ந்த
தேவ இரத்த இரகசியத்தை
எந்தன் நாவே பாடுவாயே

அவர் நமக்காய் அளிக்கப் படவே
மாசில்லாத கன்னி நின்று
நமக் கென்றே பிறக்க லானார்
அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தை யான
வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே
வியக்கும் முறையில் முடிக்கலானார்

இறுதி உணவை அருந்த இரவில்
சகோ தரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நியமனத்தின்
உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர்
பன்னி ரண்டு சீடருக்குத்
தம்மைத் தாமே திவ்விய உணவாய்
தம் கையாலே அருளினாரே

ஊன் உருவான வார்த்தையானவர்
திருவாய் மலர்ந்த சொல்லினாலே
உண்மை அப்பம் அதனைத் தமது
உடலாய் மாற்றி அளித்த பின்னர்
கனியில் பிழிந்த திராட்சை ரசத்தை
கனிவாய்த் தந்தார் குருதியாய் மாற்றி
ஐயம் இல்லா உண்மை இதனை
மெய்விசுவாசம் கொண்டே ஏற்போம்

மாண்புயர் இவ்வருள் சாதனத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறையை நீக்க
விசுவாசத்தின் உதவி பெறுக

பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும்
புகழ்ச்சி யோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவி ஆனவர்க்கும்
அளவில் லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாக ஆமேன்


 

ஓசான்னா தாவிதின் புதல்வா
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா