புனிதவாரப்பாடல்கள் | 1581-கிறிஸ்து உயிர்த்தார் | உயிர்ப்பு |
கிறிஸ்து உயிர்த்தார் சாவினை வென்றார் நாம் இன்று கொண்டாடுவோம் துன்பத்தை ஏற்றார் இன்பத்தை தந்தார் அல்லேலூயா நாம் பாடுவோம் புதுவாழ்வு நாம் வாழவே இறைவனில் நாம் சேரவே புதுமையின் தேவன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4 உயிர் தருதல் உண்மை அன்பு என்றார் உலகினர் நமக்காக உயிரைத் தந்தார் உயிர்ப்பும் உயிரும் நானே என்றார் உண்மையில் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் சாவில்லை அழிவில்லை நம் வாழ்வி;லே இனி வாழ்வே அவர் உயிர்ப்பில் (2) நானே வாழ்வும் வழியும் என்றார் நானே உலகின் ஒளியென்றார் உலகோர் சுமைகள் அவர் ஏற்றார் என்றென்றும் அழியாத அமைதி தந்தார் துன்பங்கள் துயரங்கள் மறைந்தோடுமே இனி காண்போம் புது வாழ்வு (2) |