Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தவக்காலப்பாடல்கள் 1514-மனந்திரும்பு மனிதா நீ  

மனந்திரும்பு மனிதா நீ
நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு
மனந்திரும்பு மனிதா (2)

நீதிமான்களை அழைக்க  அன்று
பாவிகளையே தேடி வந்தேன் (2)
இரக்கம் நாடும் இறைவன் நானே
பலிகளில் விருப்பம் எனக்கில்லையே
இரக்கம் நாடும் இறைவன் நானே
பலிகளில் விருப்பம் எனக்கில்லை - எனவே

பிரிந்து சென்ற மகன் தானும்
திரும்பி வந்தால் ஆனந்தமே (2)
மனந்திரும்பும் பாவியினாலே
மகிழ்வு கொள்ளும் வானகமே
மனந்திரும்பும் பாவியினாலே
மகிழ்வு கொள்ளும் வானகம் - எனவே







 

தவக்காலம் இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருட்காலம்