தவக்காலப்பாடல்கள் | 1511-தேவகுமாரா கேட்கிறதா |
தேவகுமாரா கேட்கிறதா - என் தியான கீதம் கேட்கிறதா இமைகள் திறந்து உந்தன் கண்கள் எனை மட்டும் பார்க்கிறதா - 2 உம்மைக் காண விழி கொடுத்தாய் உம்மைப் பாட மொழி கொடுத்தாய் பயணம் போக வழி கொடுத்தாய் பாதை எங்கும் ஒளி கொடுத்தாய் (2) உம்மை நினைத்தே உருகிவிட்டேன் என்னை உமக்கே கொடுத்துவிட்டேன் (2) உமக்கே என்னைக் கொடுத்துவிட்டேன் - 2 கண்ணீர் வெள்ளம் வருகிறது கர்த்தர் பாதம் தொடுகிறது என்னைப் போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது (2) உம்மை நினைத்தே உருகிவிட்டேன் என்னை உமக்கே கொடுத்துவிட்டேன் (2) உமக்கே என்னைக் கொடுத்துவிட்டேன் - 2 |