தவக்காலப்பாடல்கள் | 1506-கல்வாரி பூக்களை |
கல்வாரி பூக்களை - எம் கரங்களில் ஏந்தி வந்தோம் (2) காணிக்கை உமக்களிக்க - 2 குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம் இதய காணிக்கை உமக்களிக்க - 2 தேவா இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை உதயம் தேடும் விழியின் மொழியும் உமக்கு காணிக்கை (2) கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால் இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம் நின்று நிலைக்கும்; பெயரும் புகழும் உமக்கு காணிக்கை வென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (2) அன்பின் அமுதாய் அப்பம் அதிலே உன்னை ஈந்ததால் உள்ளம் ஒன்றிணைந்து உழைப்பின் பயனாய் எம்மைத் தருகின்றோம் |