தவக்காலப்பாடல்கள் | 1503 -கருணைத் தெய்வமே கண்பாரும் |
கருணைத் தெய்வமே கண்பாரும் - எங்கள் பாவங்களை நீர் பொறுத்தருளும் உடலும் அறிவும் மனமும் - ஒன்று சேர்ந்து உம்மை எதிர்த்ததையா தேவகட்டளை வழியை - மனம் பன்முறை அறிந்தே வெறுத்ததையா பாவச் சேற்றை நாளும் - எம் வாழ்வே கொண்டு நிறைந்ததையா பாதை தெளிவுறத் தெரிந்தும் - அதைப் பார்த்து நாங்கள் நடக்கவில்லை உண்மை விளக்கு எரிந்தும் - அதன் ஒளியின் அருகே வாழவில்லை இறைவன் அன்பு அழைத்தும் - அதை உணர்ந்த பின்னும் திருந்தவில்லை அன்பு செய்யும் இறைவா உனை மறந்து சென்றதை எண்ணுகின்றோம் நீதி நிறையும் தலைவா - எம் பாவம் நினைத்தே கலங்குகின்றோம் தூய வாழ்வின் நிறைவே - உன் மன்னிப்புத் தருவாய் உயிர் பெறுவோம் |