புதுவருடப் பாடல்கள் | புதியதோர் ஆண்டிங்கு புலர்ந்தது |
புதியதோர் ஆண்டிங்கு புலர்ந்தது புதுமையும் புனிதமும் மலர்ந்தது புண்ணியம் செய்திட அழைக்குதே புதுப்பாதைகள் நடந்திட பிறக்குதே இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இறையருள் நிறைகின்றதே இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மனம் அமைதியில் திளைக்கின்றதே மனிதரை மனிதராய் மதித்திங்கு வாழ்ந்திடுவோம் மதங்களைக் கடந்திங்கு மனிதத்தைப் போற்றிடுவோம் இதயத்தில் இறைவன் ஒளியினை ஏற்போம் இனிய உலகினை படைத்திடுவோம் சுயநலச் சுரண்டல்கள் சூழ்ச்சிகள் களைவோமே பிறர் நலம் பேணியே பேரின்பம் அடைவோமே பகிர்ந்திங்கு வாழ்வதில் பரமனைக் காண்போம் வாழ்வின் பொருளினை உணர்ந்திடுவோம் |