Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் தேவராஐன் வருவார்  
தேவராஐன் வருவார். வாரும் ஆராதிப்போம்.
எல்: தேவராஐன் வருவார். வாரும் ஆராதிப்போம்.

1. சீயோனே அகமகிழ்வாய். எருசலேம் மகளே பூரிப்படைவாய். இதோ, ஆண்டவர் வருவார். அந்நாளில் பேரொளி வீசும். மலைகள் இன்பம் துளிர்க்கும். குன்றுகள் பாலும் தேனும் பொழியும். ஏனெனில் மாபெரும் தீர்க்கதரிசி வருவார். அவர் ஜெருசலேமைச் சீராக்குவார். (தேவராஐன்)

2. இதோ, தாவீதின் குலத்தினின்று மனுதேவன் வருவார். அவர் சிம்மாசனம் ஏறுவதைக் காண்பீர். அந்நாள் நீங்கள் ஆனந்தம் கொள்வீர். (தேவராஐன்)

3. இதோ, நம் காவலரான ஆண்டவர் வருவார். அவர் சிரமதில் முடி சூடிய இஸ்ராயேலின் இராஐன். ஒரு கடல் முதல் மறுகடல்வரை, பூமியின் ஒரு கோடி முதல் மறுகோடி வரை யாவையும் அடக்கி அரசு ஆளுவார். (தேவராஐன்)

4. இதோ, ஆண்டவர் தோன்றுவார். அவர் சொல்லோ பொய்யாகாது. அவர் தாமதம் செய்தாலும் எதிர் பாருங்கள். ஏனெனில் தாமதிக்காமல் வருவார். (தேவராஐன்)

5. அன்று ஆட்டுத்தோல் மீது பெய்த மழைபோல் ஆண்டவர் இறங்குவார். அந்நாளில் நீதியும் சமாதானமும் செழிக்கும். பூமி ஆளும் வேந்தர் எல்லோரும் அவரை வணங்குவர். மாந்தர் எல்லோரும் போற்றி சேவிப்பர். (தேவராஐன்)

6. நமக்கெனப் பாலன் பிறப்பார். அவரை வல்ல தேவன் என்பர். தம்முடைய தந்தை தாவீதின் சிம்மாசனம் ஏறி அவர் செங்கோல் செலுத்துவர். அவரது வல்லபத்தை அவர் தோளிலே காண்பீர். (தேவராஐன்)

7. உன்னத கடவுளின் நகரமான பெத்லகேமே, உன்னிடமிருந்தே இஸ்ராயேலின் அதிபர் எழுந்தருளுவார். அவர் வருகை நித்திய நாட்களின் துவக்கத்திலிருந்தது போல் ஆகும். அவரை உலகெல்லாம் போற்றிப் புகழும். அவர் வருங்கால் நம் நாட்டில் சமாதானமே நிலைக்கும். (தேவராஐன்)







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா