கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | நெஞ்சமே வா தஞ்சமே தா |
காதரி சபரிச நீ தநீசா ரீ கம பத பம கா ரி தபா ஸநிபா தரிஸ கபமா நிதபா நெஞ்சமே வா தஞ்சமே தா கொஞ்சி கொஞ்சி பேச நெஞ்சமெல்லாம் ஆச பூமகனே புது மனமே தோள் சாய வா வாழ்வினிலே வழியெனவே தாலாட்ட வா ஆ...ஆ....ஆ..... பண்சேரா கவியெனவே விழித்திருந்தேன் நான் காத்திருந்தேன் நீ என்னையே மீட்டிடவே மகிழ்ந்திருந்தேன் மனம் கனிந்திருந்தேன் தீஞ்சுவையானாய் என்னில் வருவாய் அருஞ்சுணையாவாய் வளமை தருவாய் நீங்காத நிழலாய் நிதமும் எனையே தொடர்ந்து அணியாய் தாங்கும் உறவே ஆ...ஆ....ஆ..... கரைசேரா படகெனவே தவித்திருந்தேன் நான் தனித்திருந்தேன் சிறைவிலகா சிறையினிலே வாழ்ந்திருந்தேன் நான் வீழ்ந்திருந்தேன் தூவானமாய் நல்வினை பயிராவாய் வான்மேகமாய் புது நாள் மழையாவாய் வாசல் வருவாய் வாழ்வினை தருவாய் வாழ்விடம் வருவாய் உயிர் துணை நீயே ஆ...ஆ....ஆ..... |