| கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | பெத்தலகேம் ஊரோரம் |
|
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி பக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி.. எல்லையில்லா ஞானபரன் - வெல்ல மலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் - தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்.நேரம். வான் புவி வாழ் ராஜனுக்கு -மாட்டகந்தான் வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ -ஆன பழங் கந்தை என்ன பாடோபாடோ அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி -மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி இன்றிரவில் என்ன இந்த மோடிமோடி ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு -அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு நாட்டமுடன் இரட்சகரை கண்டுகண்டு. |